கோழி வந்ததா? முட்டை வந்ததா?

கோழி வந்ததா? முட்டை வந்ததா? என்று நாம் சிறு வயதில் புதிர் போடுவோம். முட்டை என்ற ஒன்றிலிருந்துதான் கோழி வருகிறது, அதே சமயம் ஒரு கோழிதான் அந்த முட்டையை இட்டிருக்கமுடியும் என்பதால் சிறு வயதுகாரர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்கள் கூட அதன் பதிலை சொல்வதில் குழம்பித்தான் போகின்றார்கள். உலகத்தில் உள்ள  எல்லாவற்றிற்கும் ஆரம்பம் ஒன்று உண்டு என்பதை நாம் உணர்ந்ததால் எது முதலில் என்று குழப்பம் வருகிறது. இது இயற்கையானதே!

இறைவனின் படைப்பு ஆற்றலை பற்றி சற்று ஆழ்ந்து யோசித்தால் இந்த குழப்பம் அகன்றுவிடும். உதாரணத்திற்கு மனிதனை இறைவன் எவ்வாறு படைத்தான் என்பதை பார்ப்போம். முதல் மனிதனை படைக்க இறைவன் கருப்பையை பயன்படுத்தவில்லை, மாறாக
களிமன்னிக் கொண்டு மனித உருவம் செய்தான், பின்பு அதில் உயிரை ஊதினான்  என்று இறைவேதம் கூறுகின்றது. அந்த முதல் மனித படைப்பே முழுமையான ஒன்றாக இருந்தது.

ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம். (15:26)  (பிறகு) அவன் மனிதனை இந்திரியத்துளியினால் படைத்தான்; அப்படியிருந்தும் மனிதன் பகிரங்கமான எதிரியாக இருக்கின்றான். (16:4)

மற்ற உயிரினங்களை எவ்வாறு படைத்தான் என்று நேரடியாக அல்லாஹ் கூறவில்லை என்றாலும் எல்லாவற்றையும் படைத்தது வளர்த்து வரும் இறைவனுக்கு  எந்த ஒன்றை புதிதாக படைப்பதோ, இல்லை அதை மறுபடி படைப்பதோ சிரமமானது இல்லை. உதாரணத்திற்கு இறுதி தீர்ப்பு நாளுக்காக பூமியி ல் உள்ள யாவற்றையும் அழித்து விட்டு மறுபடி அவன் படைப்பேன் என்கிறான்.

(மனிதர்களே!) உங்களை படைப்பதும், (நீங்கள் மரித்த பின்) உங்களை (உயிர்ப்பித்து) எழுப்புவதும் ஒருவரைப் (படைத்து, அவர் மரித்தபின் உயிர் கொடுத்து எழுப்புவது) போலன்றி வேறில்லை; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; உற்று நோக்குபவன்(31:28)

இன்னும் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு ஈசா(அலை) அவர்கள் செய்த ஒரு அற்புதத்தை அல்லாஹ் சுட்டிக் காட்டுகின்றான்: இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்:) “நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்; நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். (3:49)

எனவே முட்டையிலிருந்துதான் கோழி படைக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை.  மேலும் ஒரு முட்டையை படைத்தது  அதில் இருந்து பறவையை வெளியாகக் கூடிய வல்லமை இறைவனுக்கு உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். அவன் நாடியதை நாடிய விதத்தில் படைக்கிறான். அது அவன் ஸ்டைல். இது என்ன இப்படி படைத்தாய்? ஏன் வேறு மாதிரி படைக்கவில்லை என்றும் கூட நாம் கேட்க்க முடியாது. அவன் மிக்க ஞானம் மிக்கவனும், ஆற்றல் மிக்கவனும் ஆவான்.  அவன் ஆகுக என்று கூறினால் எதுவும் ஆகிவிடும் அவ்வளவுதான்.  மரித்து மண்ணாகிப் போனாலும் மீனும் நம்மை படைத்தது நியாயம் தீர்ப்பான்.

(அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் “குன்” - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது. (2:117)


இறைவன் இருக்கவே முடியாது, இந்த சூரியன், சந்திரன்,  அண்ட சராசரம் எல்லாம் தானாகவே உருவாகி இருக்கும், உயிரினங்கள் எல்லாம் "இயற்கையாக" அதுவாகவே உருவாகி இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு எல்லாமே குழப்பம்தான். இதுதான் முடிவான விடை என்று இருதியிட்டு எதையுமே கூறமுடியாது. முதலில் முட்டை வந்திருக்குமோ? இல்லை இல்லை முதலில் முட்டை வந்திருக்குமோ? கோழி இல்லாமல் முட்டை எப்படி? என்று எல்லாவற்றிலும் இது இப்படி இருக்குமோ அது அப்படி இருக்குமோ என குழம்பி குழம்பி கடைசியில் எதாவது ஒரு  அனுமானத்தை (GUESS) அவனே பதிலாக  எடுத்துக் கொள்ளவேண்டிய  நிர்பந்திக்கும் நிலைக்கு எளிதாக சென்றுவிடுகிறான். பிறகு அப்படி அவன் முடிவு செய்யும் விஷயங்கள் அவனின் சிற்றறிவுக்கு ஏற்றார் போலதான் அரை வேக்காடாகதான் இருக்கும்.  எப்படி ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய் தேவைப்படுகிறதோ, அதே போல ஒரு அனுமானத்தை விளங்க இன்னொரு அனுமானம், கற்பனை என புதிய கற்பனை உலகத்தில் நுழைந்துவிடுகிறான். பிறகு அதை நியாயப் படுத்த என்னவெல்லாம் செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்கிறான்.

குரங்கிருந்து மனிதன் வந்திருக்கக் வேண்டும் என்னும் அனுமானத்தை டார்வின் என்கிற இயற்கைவாதி முன் மொழிய பிறகு வந்த கூட்டம்அதற்கு கண், காது, மூக்கு வைத்து பரிணாமவியல் கோட்பாடை உருவாக்கினர். இதன் படி  உயிரினங்கள் தற்செயலாக வந்திருக்க வேண்டும், பிறகு ஒன்று மற்றொன்றாக காலப்போக்கில் மாறியிருக்க வேண்டும் மேலும் இதே அளவுகோல்படியே மனிதனும் வந்தான். அதாவது, உயிரினங்கள் ஒவ்வொன்றாக மாறி பின்னர் குரங்கு போன்ற ஒன்றிலிருந்து மனிதன் வந்திருக்க வேண்டும் என்று விளக்குகின்றது இந்த கோட்பாடு.  உதாரணமாக மான்கள் உயரமான இழை தழைகளை பறிப்பதற்காக கழுதை நீட்டி நீட்டி ஒட்டக சிவிங்கி ஆனது போன்ற கதைகள் பிரபலம்.

வெறும் களிமண்ணில் இருந்தே ஹோமோ சேப்பியன் என்னும் மனித இனத்தை படைக்ககூடிய இறைவனுக்கு குரங்கு போன்ற நியாண்டர்தால் மனிதர்களோ அல்லது அது போன்ற ஒரு இனமோ தேவையே இல்லை. இதை எல்லாம் நாம் சொன்னாலும் கூட அதை ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் இந்த  டார்வின்வாதிகள் இல்லை. ஏதாவது ஒரு விளக்கத்தை கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். பத்திரிக்கைகளும் இது போன்ற செய்திகளை வெளியிட்டு வெளியிட்டு மக்களை குழப்பி குழப்பி கடைசியில் இறைவனை நம்பாத, மனம் போன வழக்கை வாழும் சமுதாயத்தை உருவாக்கி இம்மை மறுமை இரண்டிலும் தோல்வி அடைய செய்கிறது. எந்த அளவுக்கு என்றால் மனிதன் படைப்பபடவே இல்லை, பரிணாமம் அடைந்தான்  என்று நம்பினால்தான் உங்களுக்கு "டாக்டர்"பட்டமே கிடைக்கும் என்கிற நிலை உருவாக்கிவிட்டனர்.  இவர்களுக்கு எதிராக எழும் கருத்துக்களையும், விமர்சனங்களையும்  சொல்பவர்களை பார்த்து அறிவியலுக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தி விடுகிறார்கள். எனவே இதன் மறுபக்கத்தை கிழித்து தோலுரித்து காட்டுவோம்.

உண்மையில் பரிணாம வளர்ச்சி கோட்பாடு முன்வைக்கப்பட்ட காலத்திலிருந்தே அது மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கி வந்திருக்கிறது. கடவுள் தான் அனைத்து உயிரினங்களையும் படைத்தார் என்று கூறுபவர்கள் முன் வைக்கும் வாதங்களுக்கு சரியான பதிலை, பரிணாமவியலை ஆதரிக்கும் அறிவியலாளர்கள் எடுத்து வைக்கவில்லை என்பது, இது ஏற்றுக்கொள்ளப் படாததற்கு ஒரு காரணம். மற்றொரு காரணம், இது சம்பந்தமாக அறிவியலாளர்களிடம் ஒருமித்த கருத்து இல்லை என்பது. "இது போன்று ஆதாரங்கள் இல்லையென்பதால் தான், ஆச்சர்யமளிக்கும் வகையில், தற்காலத்திய அறிவியலாளர்களில் குறிப்பிடதக்கவர்கள் "படைப்பு கோட்பாடை (Creation Theory)" நம்புகின்றனர்" .

அறிவியேலே அல்லாத, நிரூபிக்கப்படாத இந்த கோட்பாட்டை நாத்திகர்கள் தங்களது கொள்கையை நியாயப்படுத்த துணையாக கொள்வது ஆச்சர்யமளிக்கும் உண்மை. பரிணாம கோட்பாடு உண்மையாக இருந்தால் கூட அதை வைத்து கொண்டு இறைவனை மறுக்க முடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் அதனை கொண்டு இறைவனை மறுப்பது அறியாமையின் உச்சம். மனிதர்களில் உயர்வு தாழ்வு என்று பேதம் கற்பிக்கும் வர்ணாசிரமத்தை தீவிரமாக எதிர்க்கும் நாத்திகர்கள், எப்படி உலக மக்களிடையே உயர்வு தாழ்வை கற்பிக்கும் பரிணாமத்தை ஏற்றுக்கொள்கின்றார்கள்? இனவெறியால் பலரும் பாதிக்கப்பட பரிணாமமே காரணம் என்பதை எப்படி மறந்தார்கள்?

பரிணாமவியலை எதிர்ப்பவர்கள், அதனை எதிர்ப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று:
"பரிணாமத்திற்கு ஒரு ஆதாரமும் இல்லை, அப்படி அது நடந்திருந்தால் நமக்கு நிறைய உயிரினப்படிவங்கள் (Transitional Fossils) கிடைத்திருக்கும், அதை இது வரை காட்டாத இவர்கள்   மாறாக சில வைரஸ்கள் உருவ மற்றம் பெற்றது, புதிய பாக்டீரியா உருவானது என்றெல்லாம் சொல்லி இதை ஆதாரமாக கூறுகின்றனர். இவர்கள் இறைவனின் படைப்பாற்றலையும் அவனின் படைப்பின் திட்டம் என்ன என்பதை விளங்கிக் கொள்ளவே மாட்டார்களா?

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
(2:155)

நமக்கு  ஒருநோய்  வந்தால் அதை குணப் படுத்த நோய் எதிர்ப்பு அணுக்களை கொடுத்தே இருக்கிறான். சோதிக்கும் பொருட்டோ அல்லது தண்டிக்கும் பொருட்டோ ஆண்டு தோறும் புதிய புதிய வைரஸ்களோ, நோய்களோ அல்லாஹ் உருவாக்கி கொண்டுதான் இருக்கிறான். அதற்கு ஏற்றார் போல உயிரினங்களின் உடல்களுக்குள் சக்தியையும் மாறுதல்களையும் அல்லாஹ்வே கொடுக்கிறான். அவன் உயிருள்ளதிலிருந்து இறந்ததையும், இறந்ததிலிந்து உயிருள்ளதையும் வெளியாக்குகிறான். அல்லாஹ் புதிய படைப்புக்களை படைப்பதை நிறுத்திவிடவும் இல்லை, ஒரு படைப்பை வேறு படைப்பாக மற்றும் சக்தி அல்லாஹ்வுக்கு இல்லாமல் இல்லை. அல்லாஹ்வின் கட்டளையை மீறி, சனிக்கிழமை மீன் பிடித்த சமுதாயத்தை குரங்குகளாக மாற்றி தண்டித்த அல்லாஹ்,  தெளிவாக கூறுகின்றான், "நான் மனிதனை முழு படைப்பாகவே படைத்தேன் என்று சொல்லும் போது அதற்கு மாற்றமாக குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று நம்புவதோ, அதை முன்மொழிவதோ குரானை மறுத்த பாவத்திற்கு இழுத்து செல்லும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்".

அதாவது, அறிவியலாளர்களால், இதுவரை கிடைத்த உயிரினப்படிவங்களை வைத்து, மீன்கள் நிலநீர்வாழ் உயிரினங்களாக மாறின; அல்லது அந்த நிலநீர்வாழ் உயிரினங்கள், ஊரும் பிராணிகளாக மாறின; அல்லது அந்த ஊரும் பிராணிகள், பறவைகளாகவும் பாலூட்டிகளாகவும் மாறின என்று நிரூபிக்க முடியாது" --- British Daily "THE DAILY TELEGRAPH", dated 9th Sep, 2009.

"டார்வினின் கோட்பாடான இயற்கைத் தேர்வு உண்மையென்றால், உயிரினங்கள், லட்சக்கணக்கான ஆண்டுகளாக சிறுகச் சிறுக மாறி பரிணாமம் அடைந்து வந்திருக்க வேண்டும். ஆனால், 542 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய cambrian காலக்கட்டத்தில் பலவித உயிரினங்கள் திடீரென்று அதிகமாகி இருக்கின்றன" - Science Daily, Solution To Darwin's Dilemma Of 1859, Dated January 9, 2009.

கடவுளை மறுப்பதற்காக எத்தகைய கூற்றையும்  முன்மொழிவதுதான் அறிவுடமையா? துருக்கியின் பாரம்பரியமிக்க மர்மரா பல்கலைகழகத்தில் "பரிணாமத்தை ஏன் அறிவியல் நிராகரிக்கின்றது? (Why Does Science Deny Inter-Species Evolution?)" என்ற தலைப்பில்
படைப்புவாத ஆதரவு கருத்தரங்கு 2012 இல் நடைபெற்றதுகுறிபிடத்தக்கது.

கடவுளை மறுப்பதற்காக எத்தகைய கூற்றையும்  முன்மொழிவதுதான் அறிவுடமையா? நல்ல முடிவு பக்தி உடையவர்களுக்கே!!

அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, “எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!” (3:191)