15. அது என்ன தியாக திருநாள்?

தொழுகை, நோன்பு, ஜகாத் என்று எதாவது ஒரு இறை கட்டளையை நிறைவேற்ற மனம் நாடினால், மறுகனம் நமக்கு நம்முடைய வேலை பாதிக்கப்படுமே, உடல் பலஹீனமாகிவிடுமே, கைகாசு செலவாகிறதே என்று நினைப்பு வந்து தடுத்துவிடுகிறது. நீயே விரும்பவில்லை என்றால் சாக்கு போக்குகள் ஆயிரம் இருக்கின்றன என உருது கவிதை சொல்வது எத்தனை அழகாக இங்கே பொருந்தி போகிறது. இது போன்று ஹலால், ஹாராம், சுன்னத்து, நபில் என்று எது இருந்தாலும், அதை செய்ய முடியாது என்பதற்கு நம்மிடம் ஒவ்வொரு முறையும் புதிய காரணம் இருக்கவே செய்கிறது.

உண்மையை சொல்லப் போனால் அழிந்துவிடும் இந்த உலகத்துக்காக, உலக விஷயங்களுக்காக எண்ணற்ற தியாகத்திற்கு நாம் ரெடியாக உள்ளோம். ஒருவனுக்கு வேலை கிடைக்கிறது என்றால், பொருள் சம்பாதிக்கவோ, துனையை அடைய வேண்டும் என்றால் உலகத்தின் எந்த மூலைக்கும் செல்லவும், ஓவர் டைம் பார்க்கவும், தழைகீழாக நிற்கவும் நம்மால் முடிகிறது. களைத்துப் போகும் அளவுக்கு உடல் உழைப்பையும், சாப்பிடக் கூட இயலாமலும், சில நேரங்களில் பொருளையும் தியாகம் செய்து விடுகிறோம்.  எதோ ஒன்றை அடைய, இல்லை யாரையாவது திருப்தி படுத்த எந்த தியாகத்தையும் செய்கிறோம். ஆனால்  இறைவன் பற்றிய விஷயத்தில் உள்ள அலட்சியத்தால் அநேக செயல்களில்  மனம் இறங்கி செய்யமுடியாமல் தவிக்கிறோம்.

ஆனால் ஒருவன் நிரந்தர நன்மை பயக்கும் இறைவனின் திருப்தியை பெற ஒருவர் விழைந்துவிட்டால்,  அவருக்கு இறைவனை திருப்தி படுத்த வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கி இருக்குமே தவிர அதனால் ஏற்பட போகும் இழப்புகளை பற்றி கவலை படுவதாக இல்லை. நம்முடை இப்ராஹிம் (அலை) அவர்களும் அவர் மகன் இஸ்மாயிலும் அப்படிதான் இருந்தார்கள். தங்கள் இன்னுயிரையும் அல்லாஹ்வுக்கு காணிக்கை ஆக்க தயாராக இருந்தார்கள். ஆகவே அல்லாஹ்வும் இப்ராஹிமையும் அவர் மகன் இஸ்மாயிலையும் அல்லாஹ் இன்னொரு சோதனைக்கு உட்படுத்தினான், அதன் மூலம் ஒரு மகத்தானகட்டளையை உலகுக்கு அறிவித்து கொடுத்திருக்கிறான்.


சிலர் இறைவனை திருப்தி படுத்த வேண்டும் என்கிற ஆசையிலோ அல்லது நினைத்தது நிறைவேற வேண்டும் என்கிற நோக்கத்திலோ என்னென்னவோ நேர்ச்சை செய்து கொள்கின்றனர், நெருப்பில் நடப்பது, வாயில் அழகு குத்திக் கொள்வது, சிலுவையில் அறைந்து கொள்வது, உடலை கத்தியால் கிழித்துக் கொள்வது என ஏகப்பட்ட விரைட்டிகள் உள்ளன என்றாலும் அதில் உள்ள எல்லாவற்றிலும் இதயத்தை உறைய செய்வது நர பலி ஆகும்.  இஸ்லாம் நரபலியை ஒரு போதும் அங்கீகரிக்கவில்லை. அல்லாஹ் இதை இப்ராஹிம் (அலை) மூலம் ஒரு சம்பவத்தை அரங்கேற்றி இந்த பழக்கத்தை முடிவுக்கு கொண்டு வருகிறான்.



இப்ராஹிம் (அலை) தன்னுடைய மகனை அறுத்து பலியிடுவதாக கனவு காண்கிறார். நபிமார்களுக்கு ஏற்படும் கனவும் ஒரு வகையான வஹி ஆகும், எனவே அவர் தள்ளாத வயதில் பெற்ற ஒரே மகனையும் பலி கொடுக்க கனவில் வருகிறது.

இன்றும் நடக்கும் அனேக நர பலிகளில் யாரும் பலி கொடுக்கபடுபவரை நிர்பந்தமாகதான் அறுக்கிறார்கள், ஆனால் கனவை கண்ட இப்ராஹிம்(அலை) தனது மகனிடம் கனவை குறித்து உன்னுடைய அபிபிராயம் என்ன என்று ஆலோசனை கேட்கிறார்கள். ஆனால் மகனோ தந்தையின் தியாகத்தோடு போட்டி போடும் அளவுக்கு இருக்கிறார்.

"'என்னருமைத் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதை நீங்கள் செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ், சகித்துக் கொள்ப(வர்களுள் ஒரு)வனாக என்னைக் காண்பீர்கள்" என்று கூறினார். 
அவ்விருவரும் (அல்லாஹ்வுக்குக்) கட்டுப்பட்டனர். இன்னும் அவர் (தம் மகனாகிய) இவரை முகம் குப்புற நிலத்தில் கிடத்தியபோது, "யா இப்ராஹீம்! நிச்சயமாக நீர் கனவை உண்மைப்படுத்தி விட்டீர்'' என நாம் அவரை அழைத்தோம். நிச்சயமாக நாம் இவ்வாறே நன்மை செய்வோருக்குக் கூலி வழங்குவோம். நிச்சயமாக இது ஒரு தெளிவான சோதனையேயாகும். 
இஸ்லாம் நரபலியை ஒரு போதும் அங்கீகரிக்கவில்லை. மாறாக, நரபலியைக் கொலை என்றே உறுதிப்படுத்துகின்றது.  அல்லாஹ் ஒரு காரண காரியத்துடன் தடுத்து நிறுத்திய இந்த செயல் இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பது வேதனையான ஒன்றாகும்.

"இவ்வாறே இணைவைப்போரில் அதிகமானோருக்கு, தமது குழந்தைகளைக் கொலை செய்வதை (நன்மை போல்)அவர்களது இணை தெய்வங்கள் அலங்கரித்துக் காட்டின. இது அவர்களை அழிவுக்குட்படுத்துவதற்கும் அவர்களுடைய மார்க்கத்தை அவர்களுக்குக் குழப்புவதற்குமேயாகும்..." (அல்குர்ஆன் 006:137).

இஸ்லாம் நரபலியை ஒரு போதும் அங்கீகரிக்கவில்லை. அல்லாஹ் இதை இப்ராஹிம் (அலை) மூலம் ஒரு சம்பவத்தை அரங்கேற்றி இந்த பழக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தான். மதுரையில் கிரானைட் பள்ளத்தாக்கில் நர பலி கொடுக்கப்பட்டு இருப்பதை கலெக்டர் சகாயம் ஆய்வு செய்து கொண்டிருகிறார் என்பது கொஞ்சம் வருத்தமான செய்தியே!

ஒற்றைக்கு ஒற்றையான இஸ்மாயீல் என்ற அந்த ஒரு மகனைத் தம் கையாலேயே அறுக்க தந்தை ஆயத்தமாகிறார். அருமை மகனை இழக்க நேரிடுமே என்கிற தயக்கம் ஏதுமின்றி இறைக்கட்டளையே முக்கியம் எனச் செயல்பட முன்வந்த ஒரு தந்தையின் இந்தத் தியாகத்துக்கு ஈடாக எந்தச் செயலையும் குறிப்பிட்டுச் சொல்லிட இயலாது. இப்ராஹிம்(அலை) அவர்களுக்கு இன்னொரு மகன் இஸ்ஹாக் (அலை) அவர்களை இன்னொரு மகனாக பரிசளித்தான்.

இது ஒருபுறமிருக்க, ''இறைவன் உங்களுக்குக் கட்டளையிட்டதை நிறைவேற்றுங்கள்'' என்று தந்தையிடம் மகன் கூறி, 'இறைக் கட்டளைக்கு மிஞ்சியது எதுவுமில்லை' என உயிர் துறக்க முன்வரும் மகனார் இஸ்மாயீலின் உயிர்த்தியாகமோ ஈடு இணையற்றது என்று சொல்லுமளவுக்கு உயர்ந்த தியாகமல்லவோ!

இம்மாபெரும் சம்பவத்தின் தியாக வரலாறு மறுமை நாள்வரை நம்பிக்கையாளர்களின் உள்ளத்தில் பசுமையாக நிலைத்திருக்க வேண்டும் என இந்த தினத்தை இஸ்லாமிய மரபாக ஆக்கினான் இறைவன்.  நாமும் பக்ரீத்தை "தியாக திருநாள்" என்று கொண்டாடுகிறோம்.

படைத்தவனுக்கு அவனின் படைப்புகள் எப்படி கட்டுப்பட வேண்டுமென்பதை நினைவுறுத்தும் விதமாக செயற்கரிய மகத்தான தியாகத்தைச் செய்த இரு நல்லடியார்களின் தியாகங்கள் பிராணிகளின் பலியின் மூலம் எடுத்து சொல்லப்படுகிறது!


(இன்ஷா அல்லாஹ் நாளை முடியும்)


Reference:
1. அல்குர்ஆன் 037:102-110
2. http://www.satyamargam.com/islam/others/2241-2241.html