16. முஸ்லிமின், "இஸ்லாமோ-போபியா"

நாம் மஹரிப் தொழுவதற்கு  பள்ளிவாசல் போகா விட்டாலும் நமக்கு முன்பே நின்று கொண்டு, "பாய்,   என்னோட குழைந்த நாடு ராத்திரி அடிக்கடி பயத்துல அழுவுது கொஞ்சம் ஓதி விடுங்க பாய் என்று உரிமையோடு தேடி வருபவர் பலர். அவர்களுக்கு என்று ஏகப்பட்ட தெய்வங்கள் இருகின்றனவே.. இருந்தும் அல்லாஹ்வின் தயவு தனக்கும் வேண்டும் என்கிற நினைப்பு இவர்களுக்கும் இருப்பது ஏன்?

நீங்கள் என்றாவது பக்கத்தில் காசிக்கு செல்ல விரும்பியது உண்டா? கிறிஸ்தவர்களின் புனித நகரமான வாட்டிகன் சிட்டிக்குள் நுழைய ஆர்வம் காட்டியதுண்டா? அவர்களே விரும்பி கூப்பிட்டாலும், அது அவர்களுடைய வழிபாட்டு இடம்,  நமக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை என்று இருப்போம். இப்ராஹிம்(அலை) வரலாறும், நமது நபிகள் நாயகம் உபதேசங்களும் நம்மை அவ்வாறு உருவாக்கி இருக்கிறது. ஆனால் மற்றவர்கள் நம்முடைய ஆலயத்தை பற்றி இப்படியா நினைகிறார்கள்?

இல்லவே இல்லை. பாய், நாங்க உங்க பள்ளி வாசலுக்குள் வரலாமா? வந்தா ஒன்னும் சொல்ல மாட்டீங்களே? என்று யாரவது கேட்பதை நாம் பார்க்கிறோம். அவர்களுக்கு என்று தெருவுக்கு தெரு சிறு கோவில்களும், பிரபலமான பெரிய கோவில்களும் உண்டு. என்றாலும் ஏன் நம் பள்ளிவாசல் மீது இவ்வளவு ஆர்வம்? நாம் அவர்களை அவ்வபோது அன்புடன் வர அனுமதிக்கவே செய்கிறோம். இருந்தாலும் சிலரது விருப்பம் இன்னும் பெரிதாக உள்ளது. பாய் மக்காவுக்கு வரனுமுன்னு ஆசையாக  இருக்கு, ஆனா உங்க ஆளுங்க விட மாட்டேன் என்கிறார்களே ஏன்? என்று வருத்தம் கலந்த தோணியில் கேட்பதை பார்க்கிறோம்.

ஆம், உண்மைதான் மக்காவுக்கு மட்டும் நாம் யாரையும் அனுமதிப்பது இல்லை. ஏன் இப்படிசெய்கிறீர்கள்? விரும்பி கேட்கும் எங்களை மத நல்லிணக்கத்தை கருதி விடலாமே? மறுப்பது ஏனோ? என்று கேக்கும் போது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் யார் எடுத்த முடிவு இது? என்று குரானை தேடி  சூரா தவ்பாவில் "மக்கா நகரம் முஸ்லிம்களுக்கே" என்று அழுத்தமாக அல்லாஹ் கூறுவதை பார்க்கலாம்.

அட என்ன இது மற்ற இடங்களுக்கு இல்லாத முக்கியத்துவம் மக்காவுக்கு மட்டும் ஏனோ என்று சிலருக்கு புருவம் உயரலாம். தொடர்ந்து சூரா தவ்பாவை படித்தால், "அவர்கள் மக்காவுக்குள் இருக்க 4 மாதம் அனுமதியுங்கள், அதற்கு பின்னரும் அவர்கள் வெளியேறாவிட்டால் காபிர்களை பார்க்கும் இடத்திலேயே வெட்டுங்கள்" என்ற வசனத்தை பார்க்கும் போது இஸ்லாம் அறியாத முஸ்லிமுக்கும், சராசரி முஸ்லிமுக்கும் இருதய துடிப்பு கொஞ்சம் அதிகமாகலாம்.



"அட இஸ்லாம் வன்முறை மார்க்கம் அப்படீன்னு பத்திரிகையில எழுதுறது எல்லாம் சரியாதான் இருக்குதோ? குரான் முஸ்லிம் அல்லாதவர்களை கொன்றுவிட சொல்கிறது என்று தொலைகாட்சி விவாதத்தில் சொன்ன போது நான் நம்பவில்லை, ஆனா இப்போ அப்படிதானே இருக்கு?

நம்ம ஆளுங்கதானே எங்க பாத்தாலும்  குண்டு வைக்குறாங்க, எங்க பாத்தாலும் தாலிபான், இந்தியன் முஜாஹிதின், ஐ எஸ் ஐ எஸ் அப்படீன்னு ஏகப்பட்டது வேற இருக்கு, பாலஸ்தீனதுல சின்ன குழந்தை முஸ்லீமாக இருந்தால் அதுக்கும் அடிதான்.. அதுக்குதான் நாம் எப்பவும் போல தள்ளி நின்னுக்க வேண்டியதுதான் என்று நமது மனம் நமக்கு இலவச அட்வைஸ் வேறு செய்கிறது. எங்கே பார்த்தாலும் ஒரு இறுக்கமான நிலையில் முஸ்லிம்கள் தள்ளப்பட்டு இருப்பதை மறுக்க முடியாது.

இது எல்லாம் மேற்கத்திய உலகின் சூழ்ச்சி, மீடியா உருவாக்கும் இஸ்லாமோ-போபியா என்று சொல்வதையெல்லாம் நம்மவர்களில் சிலரே காது குடுத்து கேட்க கூட  தயாரக  இல்லை. முஸ்லிம்கள் செய்வது எல்லாம் இஸ்லாமாகிவிடாது.

இஸ்லாம் ஒன்றே குலம் ஒருவனே தேவன், எல்லாரும் சமம், எல்லா இனமும் சமம், எல்லா மொழியும் சமம், நன்மைக்கு நன்மை,  தீமைக்கு தண்டனை" என்பன போன்ற கொள்கைகளை சொல்லும் போது  பல கடவுள் கொள்கையை நேசிபவர்களும், உயர்வு தாழ்வு கற்பிப்பவர்களும், பொருள் சுரண்டல் செய்பவர்களும், மானக்கேடான விபச்சாரத்தை வெளிப்படையாக செய்பவர்களும், தனது மொழியை மட்டும் நேசிபவர்களும், தனது இனமே உயர்ந்தது என்கிற சித்தாந்தத்தில் இருப்பவர்களும் பாதிப்பு அடைவதாகவே உணர்வர், எனவே இஸ்லாத்தை வளர விடாமல் தடுக்க முயல்வர், முடிந்த அளவுக்கு வசதி வாய்ப்புகள் மூலம் இஸ்லாமோ-போபியாவை பரப்புவர், ஆகவே நம் 10 வயது மகன் ஒரு கடிகாரம் செய்தாலும் அது வெடிகுண்டாக இருக்குமோ என்றுதான் நினைப்பர்.

இது எல்லாம் காலத்தின் கட்டயமா என்றால் இல்லை, எப்போதுமே இப்படிதான். இப்ராஹிம் நபி உண்மையை சொன்னதற்காக ஊரை விட்டு வெளியேற வேண்டியதாக போனது, நபிகள் நாயகம் உயிரை காப்பாற்ற மக்காவை விட்டு தப்பி ஓடினார், ஜீசஸ்(அலை) அவர்களை சிலுவையில் அறைய முயன்றனர். இப்படி ஏனென்னவோ நடந்து இருக்கின்றன.. ஆம் அவர்கள் எது வேண்டுமானாலும் செய்வார்கள், அவை எல்லாம் வரலாறில் இருந்து மறைக்கப்படும், அது பயங்கர வாதமே அல்ல என்பர்.

இப்படிபட்ட சூழ்சிகளில் நம்மவர்களில் சிலர் பயந்து போய்தான் உள்ளனர். ஏற்கனவே பெயர பாத்து வேலை தர யாரும் யோசிக்கறாங்க.. இந்த லட்சணத்துல தீவிரமா அல்லாஹ்-ரசூல்- தொழுகை-தாடி அப்படீன்னு இருந்தா நம்ம எதிர்காலம் கெட்டு போய்விடும், வழியல யாரையாவது பாத்தா சலாம் சொல்வோம், பண்டிகைக்கு பார்த்தா "ஈத் முபாரக்" என்பதோடு நிறுத்திக்க வேண்டியதுதான் என்று சிலர் இருகின்றனர்.  "பயந்தவனுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்பது பழமொழி. எனவே இவர்களை இப்படியே விட்டுவிடுவோம். தூய இஸ்லாமை இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைகாவது ஒரு நாள் இன்ஷா அல்லாஹ் புரிந்து கொள்வார்கள்.

சரி நாம் குரான் விஷயத்திற்கு வருவோம். இஸ்லாம் என்றாலே "அமைதி" என்று சொல்லிவிட்டு,  காபிர்கள் மக்காவுக்குள் நுழைந்தால் பார்த்த இடத்திலேயே  வெட்டுங்கள் குத்துங்கள்" என்பது சரியா? என்று உங்களில் சிலருக்கு கேள்வி எழலாம். அதற்கான விடையை அறிய நாம் கொஞ்சம் பின்னோக்கி போவோம்.


(இன்ஷா அல்லாஹ் தொடரும்)