12. தண்ணியில்லா காட்டுக்கு டிரான்ஸ்பர் ஓகேவா?


மனிதனுக்கு இந்த உலகில் இறைவன் அளிக்கும் செல்வங்களில் சிறந்த செல்வம் "மக்கட் செல்வம்". ஆம், எவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் பிள்ளை பாக்கியம் இல்லாவிட்டால் மனிதன் எதையோ இழந்தவன் போலாகிறான்.

இப்ராஹிம் நபி - அன்னை சாரா தம்மதிக்கு குழந்தை இல்லை. இருவரும் இறைவனிடம் தங்களுக்காக ஒரு பிள்ளையை எதிர்பார்த்து இருந்தனர். காலம் செல்ல செல்ல அவர்களுக்கு மிகவும் வயதாகியும் விட்டது, எனினும் குழந்தை இல்லை, ஆனாலும் அல்லாஹ்வுடைய விதி இது என்று பொறுமையாக இருந்தனர்.

நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்கள் அல்லாஹ்விடம்  பிரத்தனை செய்தார்கள் அல்லாஹ் எனக்கு வாரிசுகளை கொடுப்பாயாக என்று மனம் வருந்தி துஆ செய்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது சாரா அம்மையார் அவர்களை கண்டு மனம் வருந்தி அவர்களின் அடிமை பெண்ணானா அன்னை ஹாஜரா அம்மையாரை அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணினார்கள்.

சமுதாயத்தில் சிலர் சில நேரம் ""மலடி", "மலடன்" என்று அருவெருக்கத்தக்க பெயர்களை சொல்லி ஏளனம் செய்வதும், வசைபாடுவதும் இல்லாமல் இல்லை. ஒருவன் பிள்ளை பெறுகிறான் என்றால், அதற்கான ஏற்பாடை அல்லாஹ் கொடுத்ததனால் பெறுகிறான், இதில் அவனுக்குஎந்த சிறப்பும் இல்லை.

ஒருவனுக்கு அல்லாஹ் குழந்தை வழங்க வில்லை என்றால், அதற்கு அந்த மனிதன் என்ன செய்ய முடியும்? அல்லாஹ் நாடாததற்கு, அல்லது அல்லாஹ் ஏற்படுத்திய இந்த சோதனைக்கு அவர்களை ஓரம் கட்டுவது எங்கனம் முறையாகும்?


அவர் இப்ராஹிம் நபியை அழைத்து, "நபியே என்னை அல்லாஹ் மலடாக்கிவிட்டான் என்பதுபோல் தெரிகிறது ஆதலால் இந்த பெண்ணின் மூலம் நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்" என்று தனது பணிப் பெண்ணான அன்னை ஹாஜிராவை இப்ராஹிம் நபிக்கு மணம் செய்து கொடுத்துவிட்டார்கள். இப்ராஹிமுக்கு இறைவன் "இஸ்மாயில்" என்னும் மகனை அன்னை ஹாஜர் மூலம் அருளினான். பொறுமைக்கு அல்லாஹ் அழகிய ஒரு கூலியை தந்தான். அவர் மூலம் வந்தவர்தான் நமது இறுதி இறைதூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள். மிக்க மகிழ்வுற்று இறைவனுக்கு நன்றி செலுத்தியவராக  இப்ராஹிம் அவர்கள் குழந்தை இஸ்மாயிலுடன் வசித்து வந்தார். ஆனால் அல்லாஹ்வின் நாட்டம் வேறாக இருந்தது.

சொல்படி கேட்காத அரசு அதிகாரிகளை, "உன்னை தண்ணி இல்லாத காட்டுக்கு டிரான்ஸ்பர் செய்துவிடுவேன்" என்று உயர் அதிகாரிகள் மிரட்டுவார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறோம். போய் தான் ஆக வேண்டும் என்றால் அங்கே தங்குவதற்கான ஏற்பாடை அறிந்துவிட்டுத்தான் செல்வோம், குறைந்த பட்சம் தங்குவதற்கு ஒரு லட்ஜாவது இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயம்தானே? இல்லாவிட்டால் எதிர்த்து சண்டை போட்டுவிடுவோமா? இல்லையா?

                                                 (Image courtesy: www.themuslimtimes.org)


இங்கே அல்லாஹ்வின் தூதர் இப்ராஹிமுக்கு மக்கா என்னும் இடத்திற்கு போக வேண்டி அல்லாஹ்வின் கட்டளை வந்து இருந்தது. அது அப்பொழுது தண்ணீருக்கும் வழி இல்லாத பொட்டல் காடாக, பாலைவனமாக இருந்தது.

நட்ட நடு பாலைவனத்திற்கு சிறு கைக்குழந்தையோடு சென்று என்ன செய்ய போகிறேன்? என்ற எண்ண ஓட்டங்கள் எல்லாம் இப்ராஹிம் மனதில் ஓடி இருந்திருக்குமா இல்லையா?

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)


Reference:

http://www.qsiakp.com/2014/06/blog-post_2151.html