பாவமின்றி மனிதன் வாழ்வது சாத்தியமா?

அடிப்படையான ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் வானவர்கள் இல்லை. பாவமே செய்யாத படைப்பாக அவர்கள்தான் படைக்கப்பட்டு உள்ளார்கள். பாவமின்றி மனிதன் என்றால் வானவர்களுக்கும் மனிதனுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும். பெரிய மாகானாக இருந்தாலும் கூட அவரும் எதாவது ஒரு நேரத்தில் சிறு பாவமாவது செய்து இருப்பார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஆதமுடைய மக்கள் பாவம் செய்பவர்கள்தான். நீங்கள் ஒரு பாவத்தையும் செய்யாவிட்டால் அல்லாஹ் வேறு ஒருகூட்டத்தை படைப்பான். அவர்கள் பாவம் செய்து விட்டு அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்பார்கள்"