11. ஹலோ அல்லாஹ்.. நான் ரொம்ப பிஸி

" அஸ்ஸலாமு அலைக்கும்  குல்தும்.  வாங்க அத்தை நல்லா இருக்கீங்களா? "

"அல்ஹம்துலில்லாஹ் வாலைக்கும் அஸ்ஸலாம் பல்கீஸ். எல்லோரும் வந்துட்டாங்களா? பயான் ஆரம்பிடுசுச்சா?"

"இல்லை இன்னும் இல்லை. இன்னைக்கு சிஸ்டர் ருக்கையா "இஸ்லாத்தை புறக்கணிக்கும் முஸ்லிம்கள்" அப்படீங்குற டாபிக்குல பேசப் போறாங்களாம். உள்ள போங்க.." என்றாள் பல்கிஸ்.

"ஏன் டாபிக்க மாத்தீடிங்க பல்கிஸ்"?

"நான் எங்க மாத்தினேன், அவுங்களாகவே மாத்தீட்டாங்க.. ருக்கையா அக்காவோட  பசங்க யாரும் நோன்பு வைக்கலாம், என்ன சொல்ல வந்தாலும் சொன்னாலும் காது குடுத்து கேக்க கூட தயாரில்லையாம். அந்த கோபம், கவலையாலதான் இந்த டாபிக்க எடுத்து இருக்காங்க போல தெரியுது .." என்றாள் பல்கிஸ்.

"என்னது ருக்கையா அக்கா பசங்க நோன்பு வைக்கலையா? சான்சே இல்லை.  அடிச்சு உடாத பல்கீஸ்." என்றாள் குல்தும்.

"ஹ்ம். நல்ல பெற்றோரோட தாக்கம் நல்ல விஷயங்களை செய்ய தூண்டும் இருந்தாலும் எப்பவுமே இது பெரிய விஷயம் இல்ல குல்தும்.  இஸ்லாமும் ஒழுக்கமும் தனி மனிதனை சேர்ந்தது. நல்ல அமல்களைச் செய்யும் போது ஈமான் அதிகரிக்கும், அல்லாஹ் தடுத்தத செய்யும் போது ஈமான் குறையும். அதனால ஈமான காப்பாத்த வேண்டிய பொறுப்பு நம்மளோடது. ஈமான் உறுதி இருந்தாதான் நோன்பு, தொழுகை எல்லாம் வைக்க முடியும்."

பரிதா விடவில்லை, "அப்ப அந்த பசங்களுக்கு ஈமான் கம்மி ஆயிடுச்சுன்னு சொல்றியாமா? இளம் வயசு பசங்க கொஞ்சம் முன்ன பின்னதான் இருப்பாங்க.. போகப் போக சரியாயிடும். உங்கள்ள எத்தன பேரு 18-20 வயசுலல்லாம் விடாம தொழுதீங்க? முழு நோன்பையும் வச்சீங்க?"

"சரிதான் அத்தை. நான் அந்த வயசுல எப்பவாவதுதான் தொழுதேன், லைலதுல் கத்ரு அன்னைக்கு மட்டும் தான் நோன்பு வைச்சேன். அப்ப எங்க வீட்டுல எல்லாருமே அப்படிதான் இருந்தோம். போகப் போகத்தான் இஸ்லாம விளங்குனோம்.அதுக்கப்புறம் மாறிட்டோம்.

ஆனா ருக்கையா அக்கா வீடு அப்படி இல்லையே.. நல்லா தொழுது, நோன்பு வச்சுக்கிட்டு இருந்த பசங்கதான்..வேலை ஹாஸ்டல்ன்னு வெளியூருக்கு போனதுக்கு அப்புறம் மாறிட்டாங்க.. வயசும் அறிவும் வளர வளர துடுக்குத்தனமும், அலட்சியமும் வந்துருது.


வயசு கோளாறு அப்படீன்னு ஒத்த வார்த்தையில சொல்லிட முடியாது. அல்லாஹ்வுக்கு கட்டுப்பட வேண்டிய விதத்துல கட்டுப்படணும். வேணுமுன்னே ராங் சைடில் வண்டி ஓட்டினா சின்ன பசங்க வயசு கோளாருல பண்ணாங்கன்னு போலிஸ் விட்டிருமா அத்தை?

"நான் அப்படி சொல்லல பல்கிஸ். சில நேரங்கள்ல வேலை பளு, வாழ்கையில பிரச்சன, மண உளைச்சல், அவசரம், இயலாமைன்னு பல விதமான அனுபவங்கள சந்திகறோம். அப்படிப்பட்ட நிலமையில அமல்கள் கூட குறைய போறது சாதாரணம்தானே..." என்றாள் பரிதா.

"நீங்க சொல்றதுல பாதிய ஒத்துக்குறேன், ஆனா முழுசும் இல்லை. வாழ்கையில யாருக்குதான் பிரச்னை இல்லை, அவசரம் இல்லை..? அல்லாஹ்தான் நமக்கு வாழ்வாதாரங்கள தர்றான். அவன் தடுத்துட்டா நாம எவ்வளவு முயற்சி பண்ணாலும் கிடைக்காது.

சரி அத்தை நான் இன்னும் ஒன்னு கேக்குறேன். பிஸி,  பிஸின்னு சொல்லுற இவுங்க வேலைய விட்டுடறாங்களா? இல்லையே.. நாலு காசு சம்பாதிக்க நாடு கடந்து போக முடியுது. ரெண்டு ஷிப்டு பாக்க முடியுது, பிஸி ஷெடுயூலுக்குள்ளையும் கிரிக்கட் வேல்டு கப்பு பாக்க முடியுது, சினிமா பாக்க முடியுது, கேம்ஸ் விளையாட முடியும்து, இதுவே பொண்ணுங்கன்னா சீரியல் பாக்க முடியுது. ஆனா நாலு ரக்கது தொழு அப்படீன்னு சொன்னா நேரம் இல்லை அப்படீன்னு சொல்றோம். இது பக்கா ஒருதலை பட்சம் இல்லையா அக்கா?"

"ஆமாம் பல்கிஸ். இருந்தாலும்,அதுக்காக கெட்டவன் மாதிரி அவங்கள  குறை சொல்லக் கூடாது. ஆமா நடுவுல தொழுவள நோன்பு வைக்கல அப்படியே போயிடுவாங்கன்னு இப்படி கடுமையாவா நடந்துகுறது?" என்றாள் பரிதா.

பல்கீஸ் கூறினாள்: " அப்படி இல்ல அக்கா.  நாம கவர்மண்டுக்கு கட்ட வேண்டிய Income Tax ஐ கட்டலன்னா அரசாங்கம் நம்மள கெட்டவனாதான் பார்க்கும். ஏன்னா நாம அரசாங்கத்தோட கட்டளையை புறக்கணிச்சுட்டோம். அரசியல் அமைப்பு சட்டத்த மதிக்க சொல்றாங்க, நீதிமன்ற தீர்ப்பு வந்தா அத விமர்சிக்க கூடாதுன்னு சொல்றாங்க.. ஏதாவது ஏடா  கூடமா பேசுனீங்கன்னா "நீதி மன்ற அவமதிப்பு சட்டம் பாயும்".  தன்னுடைய நாட்டு பிரஜைக்கே அரசாங்கம் 1008 ரூல்ஸ் போடறப்ப, அத மறுத்தா தண்டனை தர அரசாங்கம் ரெடியா இருக்கு அப்படீங்கறத கவனிங்க..

நாம யாரையும் தரம் தாழ்த்திபேசுறது இல்லை. அல்லாஹ்வே சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து கொள்ளுங்கள் அப்ப்டீனுதான் சொல்றான். நல்ல விஷயங்கள பத்தி ஞாபகம் ஊட்டறோம். மறந்துவிட்ட அல்லது புறக்கணிக்கிற விஷயங்கள்ல அல்லாஹ்வோட தண்டனைய பத்தி எச்சரிக்கிறோம்.  அவ்வளவுதான். உங்களுக்காக எனக்கு தெரிந்த ஒரு குரான் வசனத்த பத்தி சொல்றேன். அல்லாஹ்கிட்ட சவால் விட்ட இப்லிஸ் என்ன சொன்னான் தெரியுமா?"

இன்ஷா அல்லாஹ் தொடரும்)