19. யாரு அந்த அல்லாஹ் போலிஸ்? எதற்கு வேண்டும்?


"டேய் சுலைமான்..  நீ என்னைய பலவீனமான முஸ்லிம் அப்படீங்கற பார்வையில பாத்ததுனாலதான் நான் கொஞ்சம் அதிகமாத்தான் உன்னையும் சீன்டிட்டேன். "

"ஓகே சுல்தான் பாய் என்னைய சீண்டுவது ஓகே, ஆனா அல்லாஹ்-ரசூல் பத்தின விஷயத்துல கேலி கிண்டல் வேண்டாம்.. ப்ளீஸ்"

"நாங்கல்லாம் வெள்ளிகிழமைதான் தொழறோம்.. ஆனா, நாங்களும் இஸ்லாத்தை பத்தி கவலை படுறோம். அதனாலதான் ஜெப் அப்பா ஒரு முஸ்லிமாக இருந்துகிட்டே கிருஸ்துவ பொண்ண கல்யாணம் செஞ்சு இருக்கானே இது எப்படிமுடியும்? அவன் பையனோ முழுசாவே இஸ்லாதில இருந்துபோயிட்டான். இத கொஞ்சம் ஜீரணிக்கமுடியாம உன்கிட்ட வந்து கேட்டேன்... "

"இருக்கட்டும் சுல்தான் பாய்.. முதல்ல நீ உன்னைய பத்தியும் கொஞ்சம் கவலை படு.. அப்புறம் ஜெப் பத்தி கவலை படலாம்."

சுல்தான் பாய் பேசினான்: "வீட்ல என் பொண்டாட்டி டார்ச்சர் தாங்க முடியல.. ஆபீசுக்கு வந்தா உன்னோட டார்ச்சர் தாங்க முடியல.. சரி நீங்க எல்லாம் சொல்றீங்கன்னு பள்ளிவாசலுக்கு போனா ஹஜரத்துமார்கள் நரகம், கபர் அது இதுன்னு ஏதாவது சொல்லி பய முறுத்துறாங்க. எந்த ஒரு அமல் நானாக செய்யும் வரைக்கும், என்னைய நிர்பந்தப் படுத்துற மாதிரி பேசக்கூடாது."

"கவலைப்படாத சுல்தான்.. சொல்றது மட்டும்தான் எங்களோட வேலை... அத செய்யிறதும் செய்யாததும் அவங்களோட சொந்த இஷ்டம்."

"யாராவது அல்லாஹ் ரசூல் பற்றி பேசினா காது குடுத்து கேப்பேன், ஆனா நானாக  எந்த ஒரு அமல் செய்யும் வரைக்கும், என்னைய நிர்பந்தப் படுத்துற மாதிரி பேசக்கூடாது. அது எனக்கு பிடிக்கல சுலைமான்"

சுலைமான் கூறினான்: இதுல நிர்பந்தம் எங்க இருந்துடா வருது? நாங்க சொல்லுறோம்.. ஏன் சொல்றோம் தெரியுமா?  அல்லாஹ் நபி ஸல்அவர்களுக்கே என்ன சொன்னான் தெரியுமா? ...
"இன்னும் (நம் தூதைத்) தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர (வேறெதுவும் நம்) தூதர்மீது கடமையில்லை. (24:54)"

அல்லாஹ் - ரசூல் சொன்னபடி நடந்து இன்ஷா அல்லாஹ் சுவர்க்கம் போயிட்டேன்னா, அத விட வேற என்ன சந்தோசம் இருக்க முடியும். அதே சமயம் என்னோட குடும்பமும், சொந்தக்காரங்க, நண்பர்களும் சொர்கத்துல இருக்கனும் ஆசை இருக்காதா?  அந்த எதிர்பார்பில்லதான் சில நேரம் திரும்ப திரும்ப சொல்லவேண்டி ஆகிடுது, இப்படி சொல்றதுக்கு காரணம் இளகாரமாகவோ அவமானப்படுத்தவோ ட்ரை பண்ணுறோம்னு தப்பா  எடுத்துக்காதீங்க.. சில நேரங்கள்ல திரும்ப திரும்ப நான் சொல்றதுக்கு, உங்க மேல உள்ள பாசம்தான் காரணம்."

"அது சரி சுலைமான்.. பல சமயம் கொஞ்சம் ஓவராத்தான் போறீங்க.. எங்களுக்கு வயசு ஒன்னும் ஆயிடலையே... எல்லாம் வயசான சமயத்துல சரியாகிடும். "

"ஹ்ம்ம்.. எல்லாரும் 60 வயசு வாழுவாங்க அப்படீங்கறதுக்கு என்ன கிரயாண்டி சுல்தான் பாய்?.. அப்படி 60வது வயசுல யு டேர்ன் அடிச்சு தீன் படி நடப்போம் அப்ப்டீங்கறத்துக்கு எதாவது ஜியாரண்டி இருக்கா? ஒரு வேளை நாம அல்லாஹ்-ரசூல் வழில திரும்பறதுக்கு முன்னாடியே மவுத்து வந்திருச்சுன்னா என்ன பண்ண முடியும்? சில நேரங்கள்ல திரும்ப திரும்ப நான் சொல்றதுக்கு,  கவலையும்தான் காரணம்.

"சுலைமான்.. கூல்.. கூல்.. பாசிடிவ்வா நினை. எல்லாம் சரியாகிடும். வீணாக பயப்படக் கூடாது. அல்லாஹ்வை நம்ப  சொன்னீல்ல.. அதுபடி  நம்பறேன்.  முடிஞ்சத நான் செய்றேன், சில விஷயங்கள் சிலருக்கு முக்கியமா படும், சிலருக்கு அது ஒரு மேட்டரே இல்லை. எல்லாத்தையும் செஞ்சே ஆகனும்ன்னு  சொல்லக் கூடாது. எனக்கு தேர்ந்து எடுக்குற உரிமை வேணும்கறேன்."

"தம்பி சுல்தான்.. அல்லாஹ் ஒரு சான்சை கொடுத்திருக்கான், அத வேஸ்ட் பண்ணிட கூடாது. நீ சின்ன புள்ளயா இருக்கும் போது, நீ விரும்பற மாதிரி எல்லாம் உங்கப்பா உனக்கு சான்ஸ் கொடுக்கல..ஒங்கப்பாவுக்கு ஒபே பண்ணுன.. ஸ்கூல்ல, காலேஜுல்ல பள்ளிகூடத்துல நீ விரும்பற மாதிரி எல்லாம் நடக்க நிர்வாகம் உனக்கு சான்ஸ் கொடுக்கல.. அங்கயும்  விதிமுறைகளை ஒபே பண்ணுன.. வேலையுளையும் பாஸும், கஸ்டமர் சொல்றத கேக்குற.. அதுவும் உனக்கு ஓகே..

ஆனா அல்லாஹ் நமாசு, ஜக்காத், ஹலால், ஹராம் அப்படீன்னு ரூல்ஸ் போட்டா பெண்ட் ஆக முடியாதுங்கற.. தேர்ந்து எடுக்குற உரிமை வேணுமுன்னு சொல்ற.. படச்சவனுக்கு நமக்கு எது நல்லது எது கெட்டதுன்னு தெரியும். நாம நம்ம எஜமான் அல்லாஹ்வுக்கு அடிபணிஞ்சு இருக்கனும், அதுதான் அவனுடைய படைப்பான மனித, ஜின் இனங்களுக்கு நல்லது. நம்ம  ரசூல்(ஸல்)  அவுங்க மரணபடுக்கையில இருக்கும் போது கூட என்னோட உம்மத், என்னோட உம்மத் அப்படீன்னுதான் கவலைப்பட்டார். அந்த கவலையிலதான் பல பேரு தாவா பணிகள் எல்லாம் செய்யறாங்க.. "

"சரி மேட்டருக்கு வா..  ஜெப்க்கும் அவுங்க அப்பாவுக்கும் உங்கள மாதிரி தாயிகள் ஒழுங்கா தாவா பண்ணலையோ" என்று நக்கலாக சிரித்தான் சுல்தான் பாய்.

"டேய் சுல்தான், நீ கூட எந்த ஒரு அமல் செய்யும் நீயாக வரைக்கும், உன்னைய நிர்பந்தப் கூடாது,  எனக்கு பிடிக்கல அப்படீங்குற...  ஜெப்போட அப்பா தேர்ந்தெடுத்தது ஒரு தவறான முடிவு அது அவரோட சொந்த முடிவு.. இப்ப ஜெப் எடுத்தும் தவாறன முடிவுதான். ஆளாளுக்கு முடிவு எடுக்க உரிமை கொடுத்தா இப்படிதான் தப்பும் தவறுமாக முடிவெடுத்து நஷ்டமாகி போவர்கள். அல்லாஹ்வே எது நல்லது எது கெட்டது அப்படீங்குறத நமக்காகவே தெளிவு படுத்தி இருக்கான். இதுக்கப்புறமும் இந்த மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லைன்னு அல்லாஹ்வே சொல்றான். அப்புறம் அவரவர் செயலுக்கு அவரவர்தான் பொறுப்பு.

"நீங்க விரும்புறீங்களோ விரும்பலையோ மக்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய உங்களில் ஒரு கூட்டம் இருக்கட்டும் அப்படீன்னு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்லி இருக்காருன்னா "அழைப்பு பணியோட" முக்கியத்துவத்தைவிளங்கிகுங்க. நம்ம ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் ஒரு குட்டி கதை சொன்னாங்க...

ஒரு இரண்டு அடுக்கு தளம் உள்ள கப்பல்ல போயிட்டு இருக்கு.. அதில கீழ் தளத்துல உள்ளவங்க மேல் தளத்துக்கு போய்தான் தண்ணீர் எடுத்துட்டு வரணும். கீழ்தளத்துல உள்ள சிலபேர் நாம ஏன் தண்ணி வேண்டி மேல் தளத்துக்காரங்கள தொந்தரவு பண்ணனும், நம்ம அடித்தளத்துக்கு கீழே தண்ணி இருக்குதே, ஒரு சின்ன ஓட்டை போட்டு எடுத்துப்போம் அப்படீன்னு அவுங்களாகவே ஆலோசனை செஞ்சுகிட்டாங்க.. இத கேள்விப்பட்ட மேல்தளத்துக்காரங்க அது அவுங்க இஷ்டம், அப்படீன்னு கண்டுக்காம இருந்தா மொத்த கப்பலும் முழுகித்தான் போகும். அது மாதிரிதான் நாம நம்ம மஹல்லா, சொந்தக்காரங்க, குடும்பத்தினர், அப்படீன்னு நம்ம உம்மத் மேல கவலை பட்டோமுன்னா..  ஜெப் மாதிரி ஆளுங்க உருவாகறத அல்லாஹ் நாடினால் தடுக்க முடியும்."

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)