15. அது யாரு லேபில் முஸ்லிம் ?

சிஸ்டர் ருகையா பேச்சை கேட்பதற்கு முன் நம்ம சுல்தான் பாய் என்ன செய்கிறார் என்பதை பார்த்து வருவோம். பரபரப்பாக சுற்றிக் கொண்டிருந்த சுல்தான் பாயை மடக்கினான் சுலைமான்.)

"டேய் சுல்தான்.. 11 மணி அதுவுமா ஆபீசுல வேலைய எங்க  அங்கையும் இங்கையும் ஓடுற..?"

 "எங்களோட கிளையன்ட் US இல் இருந்து வந்திருக்காரு. நான் தான் அவருக்கு கம்பனி தரனுமுன்னு எங்க "தலை" சொல்லிடுச்சு.. அதுதான்.."

" சரி அதுக்கு? எங்ககூட்டிட்டு போக போற..? "

"அவுங்கல்லாம் 7 மணிக்கு ஆபீஸ் வந்து 11 மணிக்கு லஞ்ச் சாப்பிடும் பழக்கம் US காரர்களுக்கு, அதான் ஹோட்டலுக்கு செல்ல ரெடி பண்ணிக்கிட்டு இருக்கேன்." 

"மவனே.. அப்ப நீ நோன்பு வைக்கலையா?"

"கிளையண்டுக்கு கம்பனி குடுக்கணுமே அதனால நான் இன்னைக்கு நோன்பு வைக்கல..."

"நீ என்னைக்குமே நோன்பு வச்சு நான் பார்க்கல..இன்னைக்கு ஒரு புது காரணம் சொல்ற..உனக்கு ஒன்னு புடிகலன்ன அத நிராகரிக்க 1000 காரணம் கிடைக்கும்."

"அடங்கு.. அவன் அவனுக்கு ஆயிரம் கமிட்மன்ட் இருக்கு. இருக்கற பிரச்சனையில இதெல்லாம் நமக்கு சரிபட்டு வராது"

"டேய் முதல்ல அல்லாஹ்வுக்கு உண்டான கமிட்மண்ட செய்யணும்டா, அப்புறம்தான் மத்தவுங்க எல்லாம்."

"தம்பி... சுலைமான், போதும் பிளேடு போட்டது. கிளம்பு. எனக்கு நேரமாச்சு.."

"டேய் சுல்தான் இன்னைக்கு ஜும்மா தெரியுமுல்ல. சலாவுதீன் மாதிரி ஜும்மாவுக்கும் வராம ஹோட்டல்ல உக்காந்து தின்னுகிட்டே  இருக்காத, கொஞ்சம் கொஞ்சமா ஈமான் கரைஞ்சுகாணாம போயிடும். உன்கிட்ட தீன் இல்லாட்டி அப்புறம் உன்னோட குழந்தைகளுக்கும் தீன் இருக்காது.. இந்த உலகத்துல உள்ள எல்லாத்த விட அல்லாஹ்வோட மார்க்கம், அழகானது, உண்மையானது,  புரிஞ்சுக்காம.. புறக்கணிக்காதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க.. உங்க அம்மா அப்பா முஸ்லிம் அதனால இஸ்லாத்துல இருக்கீங்க.. லேபில் முஸ்லிமாகவாவது இருக்கீங்க.....இதுவே அவுங்க கிருதவங்களவோ, இந்துவாவோ இருந்தா நாமும் அதுலதான் இருந்திருப்போம்) "

"ஸ்ஸ்..அப்பப்பா.. .. எங்க இருந்துடா வறீங்க நீங்கள்லாம்? 

"சொல்றது மட்டும்தான் எங்க வேலை... சொல்லியாச்சு..அப்புறம் நீ ஆச்சு அல்லாஹ்வாச்சு.."

"ஏய் அவ்வலியா.. சொல்லியாச்சுல்ல கிளம்பு... பத்வா எல்லாம்  குடுக்க கூடாது. எங்களுக்கு எத எப்ப எப்படி பண்ணனும்னு தெரியும்.

அது சரி.. கிளயண்ட்யாரு ஸ்டீவ் மார்க் வந்து இருக்கானா? "

"இல்ல..ஜெப் ரேஹ்மான்"

"அது என்ன ரேஹ்மான்? அவன் பாயா?"

"தெரியல.. அவன எல்லாரும் 'ரேஹ்மான்" அப்படீன்னுதான் கூப்பிடறாங்க.. எனக்கும் ரொம்ப நாளா டவுட்டு இன்னைக்கு கேட்டுட  போறேன்.. " என்றவாறு இடத்தை காலி செய்தான்.

ஹோட்டலில் சுல்தான் பாயும்,  ஜெப் ரேஹ்மானும் வெயிட்டருகாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தனர்.  நீங்க பாயா என்று கேட்க துடித்தான், ஆனாலும் கேட்டால் நன்றாக இருக்காது என்று சும்மா இருந்துவிட்டான்.) 

"ஹே ஜெப்.. உங்களுக்கு எந்த மாதிரி புட் பிடிக்கும். வெஜ்? நான்-வெஜ்? ஸ்பைஸி? "

"எனக்கு சிக்கன் ஓகே"

(இந்த ஹோட்டலில் சிக்கன் ஹலால் இல்லை என்பது சுல்தானுக்கு தெரியும், இவரு முஸ்லிமாக இருந்தா, ஒரு வேளை அந்த ஹராம் சிக்கனை சாபிட்டா, சிக்கன் ஹலால் இல்லை அப்படீன்னு சொல்லாத பாவத்துக்கு ஆளாக வேண்டுமே என்று கவலை அடைந்தான். பிறகு கொஞ்சம் தெம்பை அழைத்துக் கொண்டு சுல்தான் கேட்டான்.)

"ஹேய் ஜெப் இந்த ஹோட்டல்ல சிக்கன் ஹலால் இல்லை.."

"அதனால் என்ன? நோ பிராப்ளம்" என்று சொன்னான். 

(அட எப்படி இவன்ட கேக்குறது? என்று தலையை சொறிந்தவாறே சுல்தான்  கேட்டான்,)

"ஹேய் ஜெப், நான் ஒரு பர்சனல் கொஸ்டின் கேக்கலாமா?"

"யா கோ அஹெட்" 

"உங்க பேரு ரேஹ்மானா? ரஹ்மானா?"

"இட்ஸ்  ரேஹ்மான். என்னோடகிராண்ட் பாதர் பேரு.." என்று புன்னகைதான்.

"ஆர் யு எ முஸ்லிம்?"

"நோ. மை கிராண்ட் பேரன்ட்ஸ் வாஸ்"என்று கிளையன்ட் கூலாக பதில் சொல்ல சுல்தான் கொஞ்சம் ஆடித்தான் போனான்."

"ஸாரி.. எனக்கு புரியல..   உங்க கிராண்ட் பேரன்ட்ஸ்முஸ்லிம்னா .. உங்க அம்மா அப்பா யாரு? அப்புறம் நீங்களும் முஸ்லிம்தானே..?"

"யு நோ.. என்னோட கிராண்ட் பேரன்ட்ஸ்  ரிலீஜன் பத்தி எல்லாம் அலட்டிக்க மாட்டங்க.. பட்.. ரம்ஜான், பக்ரீத் வந்தா மோஸ்ட்லி பள்ளிவாசல் போறத மிஸ் பண்ண மாட்டங்க.. என்னோடஅப்பா போஸ்னியால இருந்து வேலைக்காக US ல செட்டில் ஆயிட்டார்.. என்னோட அப்பா ஒரு கிருஸ்தவ பெண்ணை கல்யாணம் பண்ணார்.என்னோட மம்மி சர்ச்சுக்கு போவாங்க, என்னோட அப்பா பள்ளி வாசலுக்கு எப்பவாவது போவார்ன்னு நினைக்குறேன்.

யு நோ.. நான் எத பத்தியும் கவலைப் படுறது இல்லை.  மதம் கட்டுப்பாடு எல்லாம் மனுஷன் அவனாகவே உருவாகினது.. காலத்துக்கு எத்தாப்புலதான் வாழ முடியும். மதம் அப்படீங்கற விலங்க போட்டுக்க நான்  விரும்பல. எனக்கு எந்த மதத்திலயும் நம்பிக்கை இல்லை.

"அப்படீன்னா நீங்க நாத்திகரா?"

"எனக்கு தெரியாது. அவன் அவனுக்கு ஆயிரம் கமிட்மன்ட் இருக்கு. இருக்கற பிரச்சனையில இதெல்லாம் நமக்கு சரிபட்டு வராது" என்று சிரித்தான் ஜெப். 
(தன்னோட டயலாக் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தான் சுல்தான். அப்போது வெயிட்டர் இடை மறித்து என்ன வேண்டும் என்று கேட்டான். தனக்கு மட்டன் பிரியாணியையும், ஜெப்புக்கு சிக்கன் பர்கரை ஆடர் செய்தார்கள்.)

"ஹோ யு கைஸ் யீட் ஹலால்? என்று கிளையன்ட் சுல்தானை பார்த்து கேட்க ஆம் என்று அமைதியாக தலையாட்டினான்.

"Wow . You are a True Muslim" என்றான் ஜெப்.

(என்னது வாவ்வா? நான்  True Muslim ஆ? என்று தனக்குள்ளேயே பேசிக் கொண்டான். சுலைமான் சொன்னது அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

"டேய் சுல்தான் இன்னைக்கு ஜும்மா தெரியுமுல்ல. சலாவுதீன் மாதிரி ஜும்மாவுக்கும் வராம ஹோட்டல்ல உக்காந்து தின்னுகிட்டே  இருக்காத, கொஞ்சம் கொஞ்சமா ஈமான் கரைஞ்சு காணாம போயிடும். உன்கிட்ட தீன் இல்லாட்டி அப்புறம் உன்னோட குழந்தைகளுக்கும் தீன் இருக்காது. இந்த உலகத்துல உள்ள எல்லாத்த விட அல்லாஹ்வோட மார்க்கம், அழகானது, உண்மையானது,  புரிஞ்சுக்காம.. புறக்கணிக்காதீங்க..  அப்புறம் வருத்தப்படுவீங்க  உங்க அம்மா அப்பா முஸ்லிம் அதனால இஸ்லாத்துல இருக்கீங்க லேபில் முஸ்லிமாக.... இதுவே அவுங்க கிருதவங்களவோ, இந்துவாவோ இருந்தா நாமும் அதுலதான் இருந்திருப்போம்) "

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)