5. யாரு உங்க சாமி ?


முஸ்லிம் அல்லாதவர்களிடம் சென்று, "முஸ்லிம்கள் யாரை வணங்குகிறார்கள்?  என்று கேட்டால் என்ன பதில் சொல்வார்கள்? 
  • 786
  • பிறை-நட்சத்திரம் 
  • முஸ்லிம்களின் குல தெய்வம் 
  • அரபு நாட்டு மக்களின் கடவுள்
  • நபிகள் நாயகம் அவர்களை வணங்குகிறார்கள்.
  • திடீரென 1400 வருஷத்துக்கு முன்னாள் நபிகள் நாயகம் சொல்லிய கடவுள்

என பல வகையான பதில்களை தருவர். இதுதான் அவர்கள் அல்லாஹ்வை புரிந்து வைத்துள்ள நிலை.  அவர்கள் என்ன பதிலை சொன்னாலும் அதை பற்றி எல்லாம் அலட்டிக் கொள்ள நமக்கு நேரம் இல்லை என்பது வருத்தமான விஷயம். இதுதான் நம்முடைய பலஹீனமான மற்றும் யதார்த்த நிலை. ஆனால் இளைஞர் இப்ராஹிமால் சகித்துக் கொள்ள முடியவில்லை. நேரே சிலை வணக்கம் புரியும் மக்களிடையே சென்று கேள்விகள் கேட்கலானார்.


"நீங்கள் வழிபடும் இந்த உருவங்கள் என்ன?" என்று மக்களிடம் கேட்டார்  இப்ராஹிம்.

"எங்கள் மூதாதையவர்கள் இவற்றை வணங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம், ஆகவே நாங்களும் இதையே வணங்குகிறோம்"  என்று பதில் தந்தனர். 

"உங்களுக்கு எந்த நன்மையையும், தீமையும் செய்ய முடியாத இவற்றையா வணங்குகின்றீர்கள்? சிந்திக்க மாட்டீர்களா? அவை நீங்கள் சொல்வதை கேப்பதும், இல்லை, உங்களிடம் பேசவும் பேசாதே.. நிச்சயமாக நீங்களும், உங்களுடைய மூதாதையரும் பகிரங்கமான வழி கேட்டில் தான் இருந்து வருகிறீர்கள்." என்றார் இப்ராஹிம்.

"நீர் எங்களிடம் உண்மையைக் கொண்டு வந்திருக்கிறீரா? அல்லது விளையாடுபவர்களில் ஒருவராக இருக்கின்றீரா?”  என அந்த மக்கள் ஆஜரை போலவேகோபத்தில் இப்ராஹிமை பொரிந்து தள்ளினார்கள்  
 யாராவது ஒரு முஸ்லிம் அல்லாத சகோதரர் வந்து, "பாய், நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?  அல்லாஹ் யார்?" என்று கேட்டால் பரம்பரை முஸ்லிமான நாம் என்ன பதில்தருவோம்?  இந்த பதிவை தொடர்ந்து படிப்பதை நிறுத்தி விட்டு நீங்கள் மற்றவர்களுக்கு தரப்போகும் பதிலை ஒரு தாளில் முடிந்தால்   எழுதிக்கொள்ளுங்கள் மீண்டும் இந்த பதிவிக்கு வாருங்கள்.


எழுதியாயிற்றா?

முஸ்லிம் தாய்-தந்தைக்கு பிறக்காத இப்ராஹிம் "இறைவன்" யார்? என்ற கேள்விக்கு தந்த பதில், நாம் எல்லாருக்கும் ஒரு அழகிய முன்மாதிரியான பதிலாக அல்லாஹ் ஆக்கியுள்ளான்.  வாருங்கள் நாமும் இப்ராஹிம்  சிலை வணக்கம் புரியும் மக்களுக்கு விவாதத்தில் என்ன பதிலை கொடுத்தார்  என்பதை பார்போம்.


                             (image courtesy: https://britishmuseumblog.files.wordpress.com)


“அப்படியல்ல! 

எந்த ஒருவன் என்னை படைத்தானோ அவனே என் இறைவன்!

எந்த ஒருவன் எனக்கு உணவு அளிக்கிறானோ அவனே என் இறைவன்!

எந்த ஒருவன் என்னை மரணிக்க செய்கிறானோ அவனே என் இறைவன்!

எந்த ஒருவன் என்னை உயிர்பெற செய்கிறானோ அவனே என் இறைவன்! 

உங்களுடைய இறைவன் வானங்களுக்கும் பூமிக்கும் இறைவனாவான். அவனே அவற்றைப் படைத்தவன்; இதற்குச் சாட்சியம் கூறுபவர்களில் நானும் ஒருவனாக இருக்கின்றேன்”  - என்று இப்ராஹீம் கூறினார். 




இப்போது சொல்லுங்கள்: எங்களுடைய முன்னோர்கள் வணங்கினார்கள், நாங்களும் வணங்குகிறோம் என்று  சொல்வது சிறந்த பதிலா? இல்லை இப்ராஹிம் சொன்னது சிறந்த பதிலா? நிச்சயம் இப்ராஹிமுடைய பதில்தானே...  


அதனால்தான் அனேக இடங்களில் இப்ராஹிமை குர்ஆனில் அல்லாஹ், இப்ராஹிமை சிறப்பித்து கூறுவதோடு இல்லாமல், இப்ராஹிமுடைய மார்கத்தை பின்பற்றுங்கள் நபிகள் நாயகத்துக்கும், நமக்கும் திரும்ப திரும்ப சொல்லிக் காட்டுகிறான். இந்த ஒரு வசனமே "அல்லாஹ்" என்பது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உருவாக்கி கொண்ட புதிய கடவுள் இல்லை என்பதற்கு சாட்சி.


(நபியே!) பின்னர் “நேர்மையாளரான இப்ராஹீமின் சன்மார்க்கத்தை நீர் பின்பற்ற வேண்டும்” என்று நாம் உமக்கு வஹீ அறிவித்தோம்; அவர் முஷ்ரிக்குகளில் (இணை வைப்போரில்) ஒருவராக இருந்ததில்லை. (திருக்குரான் 4:125.) 

சரி நாம் கதைக்குள் மீண்டும் வருவோம்...

நாட்கள் நகர நகர அறிவுபூவமான மற்றும் யதார்த்தமான இப்ராஹிமின் வாதங்களுக்கு பதில் சொல்ல முடியாமலும், அவரை தடுத்து நிறுத்த முடியாமலும் ஒட்டு மொத்த ஊரே அவர் மீது மகா கடுப்பில் இருந்தது.  


எரிகிற நெரிப்பில் எண்ணைய் ஊற்றும் படியாக இளைஞன் இப்ராஹிம் ஒரு சம்பவத்தை அரங்கேற்றினார்.. அவ்வளவுதான்  ஊரே ஒன்று சேர  கோபக் கணலை கக்க ஆரம்பித்தது... அப்படி என்ன நடந்தது?


(இன்ஷா அல்லாஹ் தொடரும்)


Reference:

1. Quran 26; 70-82
2. Quran 21-52-56
3. Quran 16:123, 3:95
4. http://blog.britishmuseum.org/tag/ur/