9. நான் கடவுள்

அல்லாஹ் எந்த ஒரு பாவத்தையும் மன்னித்து விடுவான், இணை வைப்பதை தவிர - என்று அல்குரானில் அல்லாஹ் கூறுவதை பார்க்கிறோம். இணை வைக்காதீர்கள் என்கிற கட்டளையை குர்ஆனில் திரும்ப திரும்ப பார்க்கலாம். அது என்ன இணை வைப்பு? 

இறைவன் ஒருவனே என்றால், வணக்கத்துக்கு உரியவன் அவன் ஒருவன் மட்டுமே என்றாகிறது. இது ஏக தெய்வ வழிபாடு. எனவே இறைவன் ஒருவனே என்று மனதார ஒப்புக் கொண்டு விட்டு நீயும் கடவுள், நானும் கடவுள், என் பக்கத்துக்கு வீட்டுக்காரன் தெய்வத்திற்கு ஒப்பானவன் என்று சொல்லிக் கொண்டிருந்தால் அதுதான் இணை வைப்பு. அதாவது இறைவனுடைய இடத்தை நாம் பலருக்கு பங்கு போடுகிறோம் - இறைவனுக்கு இணையாக இன்னொன்றை எடுத்துக் கொள்கிறோம் என அர்த்தம். 

எந்த ஒரு நாட்டிலாவது இரண்டு பிரதமர்களை பார்கிறோமோ? இரண்டு ராஜாக்கள் ஒன்று சேர்ந்து ஆட்சி செய்ய முடியுமா? சாமானிய மனிதர்களே தங்கள் கண்ணியத்திற்கு இழுக்கு என்னும் போது, படைத்த இறைவன் மட்டும் அட்ஜஸ்ட் கொள்ள வேண்டும் என்று சொல்கின்றனர்.  இறைவன் தன்னை உதாசீனப்படுத்திவிட்டு இன்னொரு கடவுளை எடுத்துக் கொள்வதையோ அல்லது இறைவனுடைய சிம்மாசனத்தில் அவனை கொஞ்சம் தள்ளி உட்கார சொல்லிவிட்டு அருகே யாரையாவது அமர சொல்வதை  மிகவும் வெறுக்கிறான். என்றாலும் இஸ்லாம் தவிர ஏனைய மக்கள் இதை பற்றி எல்லாம் அலட்டிக் கொள்ள விரும்பவில்லை. 

அதுவும் இறைவனை குறைத்து மதிப்பிடுவது இன்னொரு மனிதனின் அறிவற்ற குணாதிசயம். நமது வள்ளுவரே தன்னுடைய ஒரு திருக்குறளில், "தெய்வத்தால் ஆகா(து) எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்(619)" என்று தெய்வத்தின் ஆற்றலை குறைத்தும் மதிப்பிடுகிறார். 

மக்கள் இன்னும் என்னவெல்லாம் கூறுகிறார்கள் என பாப்போம்: 

  • நான் கடவுள்.
  • குருவே தெய்வம்.
  • கணவனே கண் கண்ட தெய்வம் 
  • குழந்தையும் தெய்வமும் ஒன்று.
  • அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். 
  • வணங்குவதற்கு தாயிற் சிறந்த கோவிலுமில்லை.
  • வான் உறையும் தெய்வம் - வையத்தில் வாழவேண்டிய முறைப்படி வாழ்பவர் இந்த வான்தெய்வத்துக்கு ஒப்பாக வைத்துத் தொழப்படுவர்.

என்பன போன்ற வாசகங்கள் அன்றாடம் மக்கள் பயன்படுத்துகின்றனர். 

அப்படிப்பட்ட ஒருவன் தான் நம்ரூத் என்னும் அரசன், நானே கடவுள் என்று பிரகனப் படுத்தி இருந்தான். இப்ராஹிம் நெருப்பு குண்டத்தில் வீசப்பட்டும், அவரை நெருப்பு தீண்டாததை கேள்வியுற்ற நம்ரூத் இப்ராஹிமை அழைத்தான். 

"இப்ராஹிமே.. உன்னுடைய இறைவன் யார்?"

"எவன் பிறப்பையும் இறப்பையும் கொடுகிறானோ அவனே இறைவன்" - இது இப்ராஹிம்.

" அப்படி என்றால் என்னாலும் பிறருக்கு பிறப்பையும்இறப்பையும் வழங்க முடியும். யாரங்கே இரண்டு மரண தண்டனை கைதிகளை என் முன் கொண்டு வாருங்கள்..." என்றான் அரசன் நம்ரூத்.

(ஒருவனை கொன்றுவிட்டான், இன்னொருவனை நீ பிழைத்து போ.. உனக்கு உயிர் கொடுக்கிறேன்" என்று சொல்லி அவனை விடுதலை செய்தான்,)



"பார்த்தாயா.. இப்ராஹிம். நான் உயிரை எடுத்ததையும், கொடுத்ததையும்.." என்றான் ஏதோ சாதித்தவனாக.

(இதுதான் உயிர் கொடுக்கும் விதமா? புதிசாலியிடம் விவாதிக்கலாம். அடி முட்டாளிடம் விவாதிக்க முடியுமா? எனவே இப்ராகிம் இன்னொரு கொடுகிப் பிடி கேள்வியை போட்டார்)

"அப்படியா அரசே.. என்னுடைய இறைவன் சூரியனை கிழக்கில் உதிக்க செய்கிறான்.. நீ அதை மேற்கில் உதிக்க செய்" என்றார் இப்ராஹிம்.

(அவ்வளவுதான்.. திக்கு முக்காகி போனான் நம்ரூத். இப்படித்தான் இன்றும் பலர் இணைவைப்பு செய்து கொண்டு தங்களை  "தங்கள் செயல் சரி" என்று விவாதித்துக் கொண்டு இருகின்றனர். இப்ராஹிம் போன்ற இளைஞர்கள் நிறைய உருவாக வேண்டும்.) 

ஊரையும் எதிர்த்தாகி விட்டது, அரசனையும் பகைத்துக் கொண்டாகி விட்டது. மக்கள் அனைவரும், இப்ராஹிமின் தந்தை உட்பட எல்லோரும் சத்தியத்தை ஏற்க்கவில்லை, இனி இந்த ஊரில் இருந்து பிரயோஜனம் இல்லை,  எனவே தன்னுடைய பிரச்சாரத்தை வேறு ஊரில் தொடங்க எண்ணி, இப்ராஹிம் லூத்தையும், தன்னுடைய மனைவி சாராவையும் அழைத்துக் கொண்டு ஊரை விட்டு வெளியேறினார். 

(இன்ஷா அல்லாஹ் தொடரும்...)


Reference:
1. https://www.youtube.com/watch?v=XMceWzDbno0 
2. https://upload.wikimedia.org/wikipedia/commons/2/22/Nimrud_stele.jpg