2. ஊர் காவலன்



தமிழ், கன்னடம் பேசும் திராவிடர்களும், சமஸ்கிருதம் கொண்ட ஆரியர்களும்  ஆகியவற்றில் இடத்தை குறிக்க "ஊர்" என்கிற சொல்லை பயன்படுத்துகின்றனர். ஆரியர்களின் ஆரம்பம் ஈரானாக இருக்க கூடும் என்பது பலவாறாக நம்மபடுகிற விஷயம் என்பதை பார்த்தோம். இந்த ஈரானுக்கு அருகில் இருந்த ஈராக்தான்  இன்று உலகில் உள்ள பல நாகரீகங்களுக்கு ஆச்சாணி போட்ட இடம், ஏகப்பட்ட தொன்மையான மொழிகளின்  பிறப்பிடமாக  இருக்கலாம். புதிய சொற்களின் பிறப்பிடமாக இருந்திருக்கலாம்.


அதில் இருந்து ஏகப்பட்ட மொழிகள் பிறந்து இருக்கும்.  எனவேதான் இன்றளவும் மேற்கத்திய வரலாற்று ஆய்வாளர்கள்  ஈராக்-சிரியா-துருக்கி  சேர்ந்த "மெசபடோமியா-வை  "நாகரீகங்களின் தொட்டில்" என்று அழைகின்றனர். யூப்ரடீஸ் டைகிரீஸ் ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதிதான் மெசபடோமியா.



மனிதன் வாழ்வாதாரங்களுக்கு இன்றியமையாதது நீர், ஆறு. எனவே அதன் படுகைகளில்தான் நாகரீகம் வளர்ந்தது.  அதனால்தான் மக்கள் வந்து தங்குவதற்கும், வாழ்வதற்கும், நாகரீகங்கள் உருவாவதற்கும் காரணமாக இருந்தது. இதற்குள்தான் பாபிலோனா நகரம் இருந்தது. அந்த மெசபடோமியாவில் மந்திரம், மாத்ரீகம் போன்றவற்றிற்கு பெயர்போன ஒரு நகரம்தான் "பாபிலோனா" - பண்டைய வாணியல் சாஸ்திரம் பிறந்த இடம்.  மேலும் வரலாற்று சிறப்புமிக்க அராரத் மலைத்தொடர்  யூப்ரடீஸ் ஆறுக்கு அருகே அமைத்துள்ளது. கடல் பிரளயத்திற்கு பிறகு நூஹ் நபியின் கப்பல் தரை தட்டிய இடம்தான் அந்த அராரத் மலைத்தொடர்(ஹூத் மலை). அது என்ன கடல் பிரளயம்?

இந்து-கிருத்தவ-இஸ்லாமிய வேதங்கள் ஒரு மாபெரும் பிரளயத்தை பற்றி பேசுகின்றன. படைத்த இறைவனை வணங்காமல் காலம் சென்ற முன்னோர்களை வணங்கிய குற்றத்தால் இறைவன் கடல் பிரளயத்தை ஏற்படுத்தி அந்த பகுதி மக்களை அடியோடு அழித்தான். அவர்களில் நல்ல சிலரை காப்பாற்றினான், அவர்களில் இருந்து மனித இனம் மீண்டும் தளைத்து என்று கூறுகின்றன. இப்பொழுது நம்ம "ஊர்" கதைக்கு வருவோம்.

அந்த மெசபடோமியாவில் பாபிலோனாவிற்கு அருகே இருந்த ஒரு இடம் "ஊர்"(UR). அதை ஆண்டு வந்த அரசனின் நினைவாக அந்த பெயர் அமைந்தது. இன்றளவில் சரித்திர ஆய்வாளர்கிடையே இந்த "ஊர்" பிரபலம். ஆனால் அதற்க்கு காரணம், இந்த அரசன் இல்லை, பாபிலோனா - ஊர் இடத்தில் சுமார் 4000-5000 வருடத்திற்கு முன்பு ஒரு இளைஞன் பிறந்து வளர்ந்ததால், அந்த "ஊர்"  இன்றளவும் சரித்திர ஆய்வாளர்கிடையே பிரபலம். வரலாற்றில் மிகப் பெரிய தாக்கத்தை அவர்தான் நம்முடைய இந்த கட்டுரையின் "ஹீரோ". அவரின் ஆயுதமே பகுத்தறிவுதான், அவருடைய அழகிய வாதங்கள்தான் எதிரிகளை சிதறடித்தன. அவருடைய தியாகங்கள் அவனை மக்களுக்கு இன்றும் படிப்பினை. அவர்  உலகில் மூன்றில் இருவரை வென்றெடுத்தார், இத்தனைக்கும் அவர்  அரசனும் இல்லை, அவரிடத்தில் அரசாங்கமும் இல்லை.

அவர் பெயர் இப்ராஹிம்.




ஆம், பகுத்தறிவு பேசும் பலர் இன்று மக்களை இறைவனிடம் இருந்து தூரமாக்கும் போது, அதை விட அழகிய பகுத்தறிவு பேச்சுக்களால் மக்களை வென்றார். ஆனால் அன்றைய சூழல்அவருக்கு சாதகாமாக இல்லை. நாம் சொல்லும் சொலுக்கு சிலர் மறுப்பு தெரிவித்தாலே நம்மில் பலருக்கு முகம் சுருங்கி போகும் போது, ஒட்டு மொத்த ஊரே ஒரு தனிமனிதனுக்கு எதிராக திரும்பினால் அவர் மனம் எப்படி இருக்கும்?

அவர் தனியாள்தான். ஆனாலும் சிங்கிளாக நின்று உண்மைக்காக அவர்களை எதிர்த்தார். அவருக்கு பேராபத்துக்கள் காத்திருந்தன....


(இன்ஷா அல்லாஹ் தொடரும்..)


Reference:

1. http://www.ancient.eu/ur/
2. https://en.wikipedia.org/wiki/Ur
3. https://en.wikipedia.org/wiki/Pur_(Vedic)
4. http://vediccafe.blogspot.com/2012/08/the-sanskrit-connection-uru.html
5. http://wordadayarabic.com/2013/05/02/mother-and-father/
6. https://en.wikipedia.org/wiki/Mesopotamia
7. https://en.wikipedia.org/wiki/Babylon
8. https://en.wikipedia.org/wiki/Babylonia
9. https://en.wikipedia.org/wiki/Abraham_in_Islam