4. கொலைவெறியில் ஆடிய தந்தை

படைத்த இறைவனை வணங்குவதை விட்டுவிட்டு இவர்களே ஒரு சிலையை படைத்தது அதை வணங்குவதை  சிறுவன் இப்ராஹிம் ஏற்க்கவில்லை,  இறைவன் சிறுவயதிலேயே இப்ராஹிமிற்கு ஞானத்தை அளித்திருந்தான்.   அதனால் சிலைவணக்கம்  புரியும் தனது தந்தையை நோக்கி,

"என்னருமை தந்தையே.. நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?  என்று சிறுவன் இப்ராஹிம் கேட்டார். 
"நாங்கள் சிலைகளை வணங்குகிறோம்; நாம் அவற்றின் வணக்கத்திலேயே நிலைத்திருக்கிறோம்" என்றார் தந்தை.

"என் அருமைத் தந்தையே!  நீங்கள் அவற்றை அழைக்கும் போது, (அவை காதுகொடுத்துக்) கேட்கின்றனவா?  
யாதொன்றையும் பார்க்க இயலாத, கேட்க இயலாத இந்த சிலைகலையா நீங்கள் வழிபடுகின்றீர்?  
இவைகள் உங்களுக்கு எந்த வித நன்மையையும் தீமையும் கூட செய்ய முடித்தவை ஆயிற்றே.." என்றார் சிறுவர்.

ஆஜருக்கு கோபம் தலைகேறியது.  இப்ராஹிம் எடுத்து வைத்த எந்த ஒரு வாதத்துக்கும் அழகிய பதிலை தர முடிய வில்லை.
                                         (image courtesy: http://www.crystalinks.com/sumerart.html)

சிறிய பிள்ளை பெரிய பேச்சுக்களை பேசுவதை பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புவது இல்லை. அதுவும் எதைதெய்வம் என்று எண்ணி அவரும் அவர் ஊர் மக்களும் வணங்குகிறார்களோ அதை விமர்சித்தால்  விடுவாரா ஆஜர்?தெய்வ குற்றம் ஆயிற்றே! மேலும் பிழைப்பில் வேறு மண் அள்ளி போடுகிறான் மகன்!

“இப்ராஹீமே! நீர் என் தெய்வங்களை புறக்கணிக்கிறீரா? நீர் (இதை விட்டும்) விலகிக்க கொள்ளாவிட்டால் உம்மைக் கல்லாலெறிந்து கொல்வேன்; இனி நீர் என்னைவிட்டு நெடுங்காலத்திற்கு விலகிப் போய்விடும்” என்று கடுமையாக கூறினார் தந்தை ஆஜர்.

உங்களுக்கு வந்திராத ஞானத்தை இறைவன் எனக்கு அருளியுள்ளான். நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களைச் செவ்வையான நேர்வழியில் நடத்துகிறேன் என்று சிறுவன் இப்ராஹிம் தன்னுடைய தந்தைக்கு அழகிய உபதேசங்களை செய்தார்.

“என் அருமைத் தந்தையே!  
நிச்சயமாக ஷைத்தான், அருள் மிக்க நாயனுக்கு) மாறு செய்பவன். நீங்கள் ஷைத்தானின் கூட்டாளியாகி ஆகிவிடாதீர்கள்.
நான் உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றை விட்டும் விலகிக் கொள்கிறேன்"
என்று கூறி தனது தந்தைக்கு பாவ மண்ணிப்பும் தேடினார். ஏக இறைவனை நோக்கிய அழைப்பை இறுதிவரை ஆஜர் ஏற்கவே இல்லை.

 காலம் செல்ல செல்ல மற்ற மக்களுக்கும் எடுத்து சொல்ல ஆரம்பித்தார்.
இப்ராஹிம் மெல்ல மெல்ல வாலிப வயதை நோக்கி நகர்ந்தார். சிறுவனாக இருக்கும் போதே கொஞ்சமும் பயபடாமல் தந்தையிடம் விவாதித்தார், இப்போது வாலிப வேகம் வேறு.. சொல்லவா வேண்டும்....


(இன்ஷா அல்லாஹ் தொடரும்)




Reference:

1. Quran 19:41-48