எறும்புகளுக்கு காதுகள் உண்டா- எப்படி பேசும்-

எறும்புகள் வேதியல் சமிங்கைகள் மூலமாக பேசும். காற்றில் வரும் சப்தத்தை உணராது, ஆகவே எறும்புகள் காற்றில்  பேசியதாக அதை சுலைமான் கேட்டதாக சொல்வது பிழை என்னும் வாதங்கள் வைக்கப்படுகின்றன. ஆனால் சமீபத்திய ஆய்வுகள் குரான் கூறும் கருத்துக்கு சாதகமாகவே இருக்கின்றன.

University of New Orleans (in  Louisiana) சேர்ந்த Phil DeVries என்பவர் வாடா ஐரோப்பாவில் காணப்படும்   Myrmica scabrinodis என்னும் எறும்புகள் காற்றின் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்ளுமா? என்று ஆராய்ந்து வெளியுட்டுள்ள அறிக்கையை science இதழ்  பிபரவரி 7, 2013 இவ்வாறு வெளியிட்டு இருக்கிறது.




எறும்பு முட்டையில் இருந்து லார்வா என்னும் முழுவளர்ச்சி அடையாத (immature) புழு போன்ற ஒரு நிலைக்கு மாறும்.

பிறகு pupae என்னும் வளர்ச்சியடைந்த (mature ) புழு போன்ற நிலைக்கு மாறும். 


கடைசியாக எறும்பு Adult வடிவத்தை எடுக்கும். 






Extra- sensitive microphone ஐ       பயன்படுத்தி Phil DeVries ஆராய்கையில் லார்வா எந்த சத்தத்தையும் எழுப்பவில்லை ஆனால் pupae மற்றும்  Adult எறும்புகளின் ஒலிகளை ( faint acoustic signals) பதிவு செய்தார்.  pupae நிலையில் உள்ளவை எழுப்பும் சத்தம்  Pulse போன்று இருந்தது, அதாவது நமது நமது இதய துடிப்பை Pulse சத்தம் என்போம். அதே சமயம்   Adult எறும்புகளின் சத்தம் கொஞ்சம் நீண்டதாக வாக்கியங்களை போன்று இருந்தது என்கிறார். 




Acoustic communication ஆனது  pupae க்களுக்கு மிக முக்கியமான ஒன்று ஏனென்றால் pheromones என்னும் வேதியல் சமிங்கை களை உண்டு பண்ணும் முழுமையான உடலமைப்பை அவை பெற்று இருக்கவில்லை. எனவே pheromones மூலம் நடைபெறும் chemical communication தவிர காற்று மூலம்பேசுவதால் acoustic communication எறும்புகளுக்கு இடையே நடப்பதை அவர் உறுதி செய்தார்.


சரி அவை எவ்வாறு ஒலியை எழுப்புகின்றன? 



Myrmica cabrinodis வகைஎறும்புகளின் வயிறு பகுதிகளில் கூரான spikeகள் இருக்கின்றன. பின்னங்கால்களை அந்த spikeகள் மீது மோதி ஒலிகளை எழுப்புகின்றனவாம். இந்த சப்தங்கள் அவரச கால உதவிக்காக எழுப்பப்படும் ஒலியை சேர்ந்தவையாக இருக்கின்றன.

Larvae மற்றும் இளவயது pupae களின் ஓடுகள் மிருதுவாகவும் விஷேஷ spikeகள் உருவாகாதால் ஆபத்துக்காலங்களில் ஒலிகளை எழுப்ப முடியாமல் இருக்கின்றன. ஆனால் முதிர்ந்த  pupae கள் வலிமையான சப்தங்களை எழுப்புகின்றன. இதை பரீட்சை செய்ய முதிர்ந்த  pupae களின் விஷேஷ spikeகளை வெட்டி விட்ட பின்னர் அவைகளின் கூடுகளை தொந்தரவு செய்தனர்.  வேலைக்கார எறும்புகள்  அவசர காலத்தில் முதலில் mature pupae காப்பாற்றும், பிறகு   immature pupae காப்பாற்றும் கடைசியாக  larvae வை காப்பாற்றும். அபய ஒலியை  கேட்டு ஓடிவந்த adult எறும்புகள் முதிர்ந்த  pupae களை மட்டும்  ஒதுக்கிவிட்டு மற்ற எல்லாவற்றையும் காப்பாற்றினவாம். அந்த mature pupae இல்லாதது போல நடந்து கொண்டனவாம்.  

காதுகள் எங்கே இருக்கின்றது? எப்படி கேட்கின்றன?

Schönrogge அவர்களின் டீம் mature pupae மற்றும் adult எறும்புகள் எழுப்பும் ஒலியை பதிவு செய்து கொண்டு அதை வெவேறு நேரங்களில் ஸ்பீக்கரில் எழுப்பினார்கள். அதை கேட்டு ஓடிவந்த வேலைக்கார எறும்புகள் தங்களது ஆன்டெனாவை ஸ்பீக்கரில் தேய்த்து அவற்றை  guard செய்தன. பிறகு  Schönrogge அவர்கள்  white noise ஐ எழுப்பினார், ஆனால் வேலைக்கார எறும்புகள் எந்த ரெஸ்பான்ஸ் ஐயும்  செய்யவில்லை. இதன் மூலம்   acoustic communication ஐ உறுதி செய்தனர்.


விபரத்திற்கு பார்க்க: 
1. http://www.sciencemag.org/news/2013/02/shhh-ants-are-talking
2. http://www.cell.com/current-biology/abstract/S0960-9822(13)00013-4
3. https://answersingenesis.org/creepy-crawlies/insects/ants/
4. http://topdocumentaryfilms.com/ants-natures-secret-power/


எறும்புகளின் ஒலியை  கேட்க வேண்டுமா? இந்த தளத்திற்கு செல்லவும் 
































Source : http://www.sciencemag.org/news/2013/02/shhh-ants-are-talking