Showing posts with label நபி மொழி. Show all posts
Showing posts with label நபி மொழி. Show all posts

நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்

எதிர்காலம் என்பது நம்மை நோக்கி வரலாம் அல்லது வராமலும் போகலாம் . அடுத்த நொடி எனபது இறைவன் தந்தால் மட்டுமே உண்மை . எனவே நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற நிகழ் காலத்தை உயிரோட்டமுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும் .

இதை நபிகளார் இவ்வாறு கூறுகிறார்கள் ...நீ மாலை நேரத்தை அடைந்து விட்டால் காலை வேளையை எதிர் பார்க்காதே . நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர் பார்க்கதே ........

கிடைத்த நிகழ காலத்தை பயன்படுத்தி வாழ கற்றுக்கொள்வதே வாழ்வதற்கான சரியான காலம் என்பதை இந்த நபி மொழி உணர்த்துகின்றது .

மேலும் நபிகளார் கூறினார்கள் .......மனிதன் முதுமையடைந்துவிட்டாலும் அவனிடம் இரண்டு விஷயங்கள் இளமையாகவே இருக்கின்றன . அதில் ஒன்று உலகத்தில் செல்வத்தின் மீதுள்ள ஆசை . மற்றொன்று நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை...... .

உடல் முதுமை அடைவதைப்போன்று உள்ளமும் முதிர்ச்சி அடைய வேண்டும் என இஸ்லாம் போதிக்கிறது .