4. தொழுகை நோன்பு சுமையாக தெரிவது எதை உணர்த்துகிறது?


"ஏங்க நம்ம மகள் ஆயிஷாவிற்கு உடம்பு சரிஇல்ல உடம்பெல்லாம் கொதிக்குது"
"சரி வண்டி சாவிய எடு, அப்துல் கரீம் டாக்டர் இருப்பாரு பார்த்துட்டு போகலாம்."
.............................................................................................................................
" ஆயிஷாவுக்கு வாயெல்லாம் கசக்குது, உடம்பு தீயா கொதிக்குது டாக்டர்  "
"அப்படியா இந்த தர்மாமீட்டரை பாப்பா வாயில ஒரு நிமிஷம்  வைம்மா." ...
 
"ஹ்ம்ம்..101 டிகிரி காய்ச்சல் இருக்குது,சரி இந்த டேபிலட்ட 3 வேளை சாப்பிடு...இன்ஷா அல்லாஹ் குணமாயிடும்"
"ஜசக்கல்லாஹ் டாக்டர் .." 

பீஸ் கொடுத்துவிட்டு வெளியே வந்தனர், வண்டி ஸ்டார்ட் பண்ணுகையில் கணவன் மனைவி உரையாடல் ஆரம்பித்தது.
............................................................................................................................. 
 "ஏங்க வண்டீல பெட்ரோல் இருக்கா? போட்டு கடைசியா போட்டு 10 நாள் இருக்குமே.. 
"கவலை படாதடி.. இங்கபாரு சின்னதா ஒரு முள்ளு சிவப்பு பட்டைக்கு மேல காட்டுது..  இன்னும் 10 மைல் தாண்டி ஒரு பங்கு இருக்கு அங்க போட்டுக்கலாம் அது வரைக்கும் வண்டி இழுக்கும்" 

மேலும் சுல்தான் பாய் தொடர்ந்தார்: "பாத்தியா குல்தும் .. மனுஷன் எவ்வளவு அட்வான்ஸா இருக்கான்.. மனுஷனுக்கோ, மத்ததுக்கோ ஏதாவது பிரச்சனைன்னா  ஏன் பிரச்சனைன்னு கரெக்டா சொல்ல  சின்னதா ஒன்னு தெர்மா மீட்டர்ன்னு சொல்றான், உடம்புல வச்ச உடன 101 டிகிரீன்னு சொல்லுது, சின்னதா ஒரு முள்ளு பெட்ரோல் இருக்கா இல்லையான்னு கரெட்டா சொல்லுதது.. பிரச்சன என்னன்னு சொல்லு, பதில அது சொல்லும்" 
 

"ஏங்க உங்களால தொழ முடியல, நோன்பு வைக்க முடியலன்னு சொன்னிங்களே" அந்த பிரச்சனைக்கு காரணம் என்னன்னு சொல்ல ஏதாவது ஈமான் கீமான் மீட்டர்ன்னு நல்லா இருக்கும்ல..?" விந்தையாக ஒரு கேள்வி வைத்தாள் மனைவி குல்தும்.

"(கொஞ்சம் கூட இதை எதிர்பார்க்காத சுல்தான் பாய் கொஞ்சம் ஆடித்தான் போய் விட்டார்..) 
"அப்படியே வண்டிய என் தாத்தா பரீத் ஹல்ரத் வீட்டுக்கு விடுங்க, அவருகிட்ட உங்க பிரச்சனைய சொல்லுங்க ஏதாவது தீர்வு கெடைக்குதான்னு பார்ப்போம்."

(சுல்தான் பாய் எதுவும் பேசவில்லை.. வண்டி ஹல்ரத் வீடு நோக்கி செல்கிறது)

"அஸ்ஸலாமு அலைக்கும் தாத்தா.. இவரு நோன்பே வைக்க மட்டேன்குறார் தாத்தா, உடம்பெல்லாம் நல்லாதான் இருக்கு... ஏன்னு கேட்டா ஆர்வம் இல்லை அப்படீங்குறார், என்ன காரணம் அப்படீன்னு சொல்ல அல்லாஹ் ஏதாவது குடுத்திருந்தா நாம நம்மள சரி படுத்திக்கலாம்மே..." என்று மனதில் உள்ளதெல்லாம் படப்பட வென்று கொட்டினாள் குல்தும்.

பரீத் ஹல்ரத் பேச ஆரம்பித்தார்:
 
"இருக்குது குல்தும் அப்படி ஒரு சாதனம் இருக்குது..."
நீங்க குர்பானி கொடுக்கும் போது கூட அந்த கறியோ, ரத்தமோ அல்லாஹ்வ வந்து அடைவது இல்லை, உங்களோட இறையச்சத்ததான் நான் பார்க்கிறேன்னு அல்லாஹ் சொல்றான். இங்க முக்கியமானது இறையச்சம்தான். நம்ம செயல்ல கூட குறைய இருந்தா கூட அல்லாஹ் நாடினால் மன்னிப்பான், நம்பிக்கை கொண்ட எல்லோருக்கும் இறையச்சம்தான் முக்கியம். இத நீங்க கண்டுபிடிக்க அல்லாஹ் கொடுத்த சாதனங்கள்தான் தொழுகை, நோன்பு, ஜகாத், குர்பானி எல்லாம்... 

அல்லாஹ் குரான்ல சொல்றான்: 
...பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.(2:45)
 

ஆக, உங்களுக்கு தொழுகை, நோன்பு எல்லாம் கஷ்டமா தெரியவருதுன்னா..   உள்ளச்சம் கம்மி ஆயிடுச்சு அப்படீங்கறதுதான் அது காட்டுது. ஆக உள்ளச்சத்த வளர்துகுங்க.. இன்ஷா அல்லாஹ் எல்லாம் போக போக சரியாயிடும்.." என்று சொல்லி புன்னகைத்தார்.

(இன்ஷா அல்லாஹ் தொடருவோம்)