7. செவிக்கு பூட்டு

குல்தும் தனது கனவனிடம் கூறினாள்:  என் தாத்தா கூட எந்த ஒரு கடமையான நோன்பு, கடமையான தொழுகை மட்டும்தான் செய்வார். நான் கூட ஒரு தடவ ஏன் தாத்தா ஹல்ரத்தா  இருந்துகிட்டு என்ன விட கம்மியா இபாதத் செய்யுறீங்கலேன்னு கேட்டேன். அவரு சிரிச்சுகிட்டே என்ன தெரியுமா சொன்னாரு? 

"ஒவ்வொருதற்குக்கு ஒவ்வொரு அளவுகோல் இருக்கு. எல்லாத்தாலையும் எல்லா இபாததுக்களையும் செஞ்சுட முடியாது. சிலருக்கு நோன்பு வைக்கறது ஈஸி, சிலருக்கு குரான் ஓதுறது, சிலருக்கு  தகஜ்ஜத். சிலருக்கு அதிகமா தான தர்மங்கள் செய்ய பிடிக்கும், யாருக்காவது தாவா செய்யணும்னா சொல்லு இன்ஷா அல்லாஹ் நான் ஓடி வருவேன். நான் கடமையான வணக்கத்தை செய்வதோடு சில பல சுன்னத்தான , நபிலான  வணக்க வழிபாடுகளை செய்கிறேன், உன்னுடைய அளவுக்கு நான் இல்லாவிட்டாலும்,  மிகவும் குறைவாக செஞ்சு தவறான முன் உதாரணமாகவும் மாட்டேன். 

நான் என்ன சொல்ல வரேன்னா .. வணக்க வழிபாடுல நான் உன்ன விட பெரிசு, நீ என்ன விட சிறுசுன்னு எல்லாம் நினைக்க கூடாது. இப்படி நினைக்குறது மனசுல ஒரு superiority Complex  ஐ ஏற்படுத்தும். அடுத்தவனை இளக்காரமா பார்க்க கூடிய மனநிலை  வரும் கூடவே, பெருமையும் வந்துவிடும். பிறகு மற்றவர்களை மதிக்க தெரியாமல் போய் விடும். யாருடைய பேச்சுக்கும் செய்வி சாய்க்க முடியாம நஷ்டமடைய வேண்டியாகிவிடும். வணக்க வழிபாடானாலும் சரி, வசதி வாய்ப்பு  ஆனாலும் சரி, நான் உன்னவிட பெரிசாக்கும் அப்படீன்னு நினைச்சா போச்சு.. அவ்வளவுதான்.. அல்லாஹ் கேவலபடுத்தி  வெளிய அனுப்பிடுவான். 

அல்லாஹ் மனுஷன படைக்குறத்துக்கு  முன்னாடி ஜின் இனத்தை நெருப்பால படைச்சான். அதுல ஒருத்தன்  அல்லாஹ்வை வணங்கி மிக நல்ல பேரு எடுத்து  மலக்குமார்கள் ரேஞ்சுக்கு உயர்ந்துவிட்டான். அவன்தான் இப்லீஸ். அளவுக்கு அதிகமான வணக்கம் அவனுக்கு தலை கனத்த தவிர எதையும் தரல. அல்லாஹ் மனிதனை முதன்முறையா படைக்கும் போது  அவனுடைய கர்வம் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதில் இருந்து தடுத்திடுச்சு.. நான்  நெருப்பினால படைக்கப்பட்டவன், வெறும் களிமனால  படைக்கப்பட்ட ஆதமுக்கு சுஜுது செய்ய முடியாதுன்னு அல்லாஹ்க்கிடையே  வாக்கு வாதம் செய்தான். பெருமைக்கு உண்மையான சொந்தக்காரன் அல்லாஹ்  மட்டும்தானே...   "

குல்தும் சொன்னாள்: அதே போல inferiority Complex ஐயும் வர விடக்கூடாது. அது  உங்ககிட்ட உள்ளத  பற்றாக்குறையாக காமிக்கும், அதே தேவை இல்லாம பொறாமை, திருப்தி அடையாத நிலைமையை  ஏற்படுத்தும். பாத்திங்களா அதனாலதான் என் தாத்தா உங்களுக்கு உபதேசித்தது பிடிக்காம போயிடுச்சு, superiority complex போலவே , யாருடைய அறிவுரையையும் உள்ள எடுதுக்கவிடாது. ஆக முன்னதும் வேண்டாம், பின்னதும் வேண்டாம்.  

அதனால திருப்பியும் சொல்றேன், அவன்  என்ன நினைப்பான் இவன் என்ன நினைப்பான் அப்படீன்னு எல்லாம் அலட்டக் கூடாது. 

அல்லாஹ் என்ன சொல்றானோ அத தவறாம செய்யணும், அல்லாஹ் என்ன அளவுகோல் வச்சு இருக்கானோ அத குறைக்காம செய்யணும், 

அத அல்லாஹ்வுக்காக மட்டும் செய்றேன் அப்படீன்னு நிய்யத்து மனசுல இருக்கனும். அல்லாஹ்வுக்கு முன்னால நான் எப்படி அப்படீன்னு மட்டும்தான் சிந்திக்கனும்.

 நான் சொல்றது சரிதானே?"

சுல்தான் மெல்ல புன்னகைத்தான்.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)