3. எனக்கு நோன்பு வைக்க ஆசைதான் ஆனா முடியலையே...

ஏங்க... நாளைக்கு முதல் நோன்பு வைப்பீங்களா? அரிசி உங்களுக்கும் சேர்த்து வைக்கவா? - இது அடுப்பறையில் இருந்து சுல்தான் பாய் மனைவி குல்தும்.

சுல்தான் பாய் பதிலே சொல்லவில்லை.. போன ஜும்மாவில் இமாம் கூறிய குரான் வசனத்தை பற்றிய எதோ நினைவில் மூழ்கிவிட்டார்... வாருங்கள் நாமும் அவரின் நினைவோடு சங்கமிப்போம்...

"ஹ்ம்ம்... எனக்கும்  நோன்பு வைக்க ஆசைதான் ஆனா முடியலையே... இப்படி இருக்கும் எனக்கு எனக்கு சுவனம் கிடைக்குமா கிடைக்காதா ? இத தெரிஞ்சுக்க எதாவது முடிஞ்சா  நல்லா இருக்குமே" ... அட நாமும் சில நேரங்களில் இப்படி சிந்திப்பது உண்டு.  


யார் சுவனவாதி, நரகவாதி என்பதை குர்ஆனில் அல்லாஹ் இப்படி கூறுகிறான் :
# ....எவர் தீமையைச் சம்பாதித்து, அந்தக் குற்றம் அவரைச் சூழ்ந்து கொள்கிறதோ, அத்தகையோர் நரகவாசிகளே; அவர்கள் அ(ந் நரகத்)தில் என்றென்றும் இருப்பார்கள்.
# எவர் நம்பிக்கை கொண்டு நற்கருமங்களைச் செய்கிறார்களோ, அவர்கள் சுவர்க்கவாசிகள்; அவர்கள் அங்கு என்றென்றும் இருப்பார்கள்.( 2:81-82)


"ஏங்க நோன்பு வைக்குறீன்கன்னா சொல்லுங்க.. இல்லாட்டி நான் உங்களுக்கு சாதம் வைக்கல..": மறுபடி அவர் மனைவி உள்ளே இருந்து சத்தம் போட்டார்.

நம்ம சுல்தான் பாய் கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்து கவலையுடன் இருந்தார், தனதுமனைவியிடம் பார்த்து,

"அடியே குல்தும்...  
யாராவது குரான் ஹதீஸ் பற்றி பேச ஆரம்பித்தால் போர் அடிக்குது.... . 
அப்படி அவ்வாறு வலுக்கட்டாயமாக அமர வைத்து பேசினால் அவர்கள் மண்டையை மண்டையை ஆட்டிவிட்டு விட்டால் போதும் என எஸ்கேப் ஆகத்தான் தோணுது .....  
சில நேரங்களில் யாரவது தாடிக்கார பாயை பாத்தா...அய்யோ செத்தோம் என்றோ...."கடி" மனிதர்கள் என்றோ.. வாழ்கையை என்ஜாய் பண்ண தெரியாதவர்கள் என்றோ.. 
நாம என்ஜாய் பண்ணுவதையும் தடுக்க வந்தவர்கள் என்றோ.. இப்படி பலவித எண்ணங்கள் மனசுல ஓடுது .. "
எனக்கும் மனசுல எங்கோ ஒரு மூலையில் நோன்பு வைக்கணும், தொழுவனும், நல்ல முஸ்லிமாக இருக்க வேண்டும் என்று விருப்பம் இருக்கு.. இருந்தாலும் செயல் படுத்த முடியலையே... ஏன் ?"

குல்தும் பதில் எதுவும் சொல்லாமல்,  ஒரு சிறிய புன்னகையை பதிலாக போட்டுவிட்டு  இடத்தை காலி செய்துவிட்டார்.. 

உண்மைதான்.. நம்ம சுல்தான் பாய் மாதிரி நம்மில் நிறைய பேர் மனதில் வலியோடு கேள்விகளோடு  இருக்கவே செய்கிறோம்.. யாரவது  அல்லாஹ் ரசூல்  பற்றி பேசினால் ஒரு வைகயான குற்ற உணர்ச்சியில் நெளிந்து கொண்டு இருக்கிறோம் ... சரிவர தொழ முடியவில்லை, நோன்பு பிடிப்பது இல்லை. அப்படி பிடித்தாலும் ஒரு வகையான அமைதி இன்மை இல்லாமால்... அந்த இபாதத்தில் ஈடுபாடு இல்லாமால் ... இதுவே இன்னைக்கு கடைசி நாளைக்கு நோ.. என்று சிலருக்கோ.. ரமலான் ஆரம்பித்த அதே நாளில் ரமலான் நோன்பு முடித்தும் விடுகிறது..


குரான் ஹதீஸ் எல்லாம் சொன்னால்  கேட்க நன்றாகவே இருக்கும், ஆனால் செயல் வகையில் அதை நிலை நாட்டுங்கள் என்றால் முடிவதில்லை. அது ஒரு பெரும் சுமையாகவே தெரியம்... 

இதை நிவர்த்தி செய்வது எவ்வாறு??


(இன்ஷா அல்லாஹ் தொடருவொம் )