நாத்திகர்கள் மதங்களை வெறுப்பது ஏன்?

மனிதனை நல் வழிபடுத்துவது மதங்களின் பொறுப்பு. ஆனால் அவை எந்த அளவுக்கு மனிதர்களை மாற்றி உள்ளது என்பதை பொறுத்து மதங்கள் பாராட்டவோ குறை கூறப்படும்.  எல்லா ஆத்திகர்கள் நல்லவர்களா? இல்லை உண்மைதான். மதங்களிலும் ஏகப்பட்ட குழ்பபங்களை பார்க்கிறார்கள் அதனால் அனேக நாத்திகர்களுக்குள் மதங்கள் மீதும் அதை பின்பற்றுபவர்கள் மீதும் கோபம் ஆண்டவன் இல்லை என்கிற முடிவுக்கு அவர்களை தள்ளுகிறது.  அதற்கு பகுத்தறிவு மூலாம் பூசி நியாயப்படுத்துகின்றனர்.

உண்மையிலேயே அறிந்துதான் இறைவனை மறுக்க செய்கிறார்களா என்றால் பதில் எப்போதுமே தெளிவற்றதகவே உள்ளது.ஏனென்றால் கடவுள் இல்லை என்று நிரூபிக்க முடியாத போது ஒருவேளை இருக்கலாம், ஆனால் நாங்கள் கவலைப்படவில்லை என்பது இன்னொரு பதில் எனும் போது  மதங்களையும், மதவாதிகளை காரணம் காட்டி இறைவனை மறுப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதா? எல்லாநாத்திகர்களும் அடிப்படையான சில விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும்.


(1) மனிதன்  தவறுக்கு மதத்தை குறை சொல்லல் ஆகாது:

எந்த ஒரு மனிதனும் ஒரே மன நிலையில் எப்போதுமே இல்லை.  உணர்ச்சியின் காரணமாகவோ அல்லது தன்னிடம் உள்ள தீங்குனங்கள்(பொறமை,லட்சியம், அவசரம், பொறுமை இன்மை போன்றவைகளால்) அவ்வபோது சருகவே செய்கிறான். தன்னுடைய சொந்த மதத்தின் மீதுள்ள விருப்பத்தின் காரணமாக மற்றவர்கள் மீது வரம்பு மீறினாலும் சரியே
உதாரணம் 1:சார்லி ஹெப்டே மீதான தாக்குதல், குஜராத் இனப் படுகொலை, புத்த பிட்சுகளின் இன வன்முறை, சிலுவை போர்... போன்றவை. 
உதாரணம் 2:விபச்சாரம், தற்கொலை, கொலை,  கற்பழிப்புகள், லஞ்ச ஊழல்கள், சிவப்பு விளக்கு பகுதிகள், போதை பயன்பாடுகளில் சீரழிந்து இருப்பது நாத்திக நாடுகளா? ஆத்திக நாடுகளா?

ஆத்திக நாடுகளில் இருக்கும் ஆத்திகர்கள் இறைவனுக்கு பயந்து ஒழுக்கமாக இருப்பார், எப்போதாவது இறை நினைப்பு வந்தால் ஒழுக்கமாக இருக்க முயற்சி செய்வர். இறைவனை பற்றிய பயம் இல்லாதவன் செய்யும் அட்டூழியத்தால்தான் ஆத்திக நாடுகளும் வெகுவாக பாதிக்கப் படுகிறது.. 
உதாரணம் 3:இறை நம்பிக்கை அற்றவர்களும் ஏராளமான குற்றங்களை செய்தும் இருகின்றனர்(ஹிட்லர், ஸ்டாலின், ஹிரோஷிமா, நாகசாகி  முதல் ஏராளமான கொடூர சம்பவங்களை ஆத்திகர்களும் செய்து உள்ளனரே! இரண்டு உலக போர்களில் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் மாண்டனர். மதங்களால் ஏற்பட்ட மரணங்களை விட இவை பல அடுக்கு மடங்கு அதிகம். இதற்கு யார் பொறுப்பு சொல்லுங்கள் நாத்திகர்களே..  
இஸ்லாமியர்களாகிய நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.  பெரும்பாலும் இஸ்லாமிய மத கிரந்தங்களை படித்து இஸ்லாத்திற்கு வருவது இல்லை, மாறாக இஸ்லாமியர்களின் செயல்களையே அளவு கோலாக கொள்கின்றனர்.  ஆகவே நாம் ஒழுக்கத்துடன் நடப்பது நமது மார்க்கத்திற்கு செய்யும் கைமாறு.  
கேள்வி 1: அப்படி என்றால் மதங்களில் தவறுகளே இல்லையா?

கேள்வி 2: உலகத்தில்  ஏன் இத்தனை மதங்கள்? அதில் ஒவ்வொன்றிலும் சில  பல முரண்பாடுகள், தவறுகள்?
கேள்வி 3: ஆண்டவன் முன்பே  ஏன்  ஒரே ஒரு மதத்தை கொடுக்கவில்லை?

கேள்வி 4: குறைந்த பட்சம் குறைகளற்ற ஒரு மதத்தையும் அனைவருக்கும் தெளிவாக்கி வைத்து அனைவரையும் அதன் நோக்கி செலுத்தாது ஏன்?

(2) பல கொள்கைகளயும் நம்பிக்கைகளையும் கொண்டு இருக்கும் பல்வேறு மதங்களும் ஒரே தன்மை உடையவை அல்ல. எல்லாமே சரி என்பது உண்மை இல்லை. எது சரி என்று பார்க்கும் போது  மனிதர்களிடையே மோதல் போக்கு வர செய்யும்   மனிதனை மாபாதகங்களில் இருந்து தொலைவாக்குகிறது.ஒவ்வொரு மதங்களிலும் அனைவருக்கும் திருப்தி தருமா என்றால் இல்லை.. அவரவர் புரிதலுக்கு ஏற்ப சில மோசமானவையாக கூட தெரியும். பிரச்னை புரிந்து கொள்வதில்தான் உள்ளது. தவிர மதங்கள் இல்லை.

(3) ஆண்டவன் ஒருவன் இருந்து இருந்தால் இந்த மாதிரி குழப்பங்கள் வந்திருக்குமா? அப்படி என்றால் ஆண்டவன் இல்லை என்கிற முடிவுக்கு அநேகர் வருகிறார்கள். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் ஆண்டவன் மதங்களை உருவாக வும் வில்லை, மனிதன் தன சுய இச்சை காரணமாக செய்வதற்கு கடவுளை மறுக்காதீர்கள்.அவன் நடப்பவை எதுவும் அறியாத வனோ, முட்டாளோ அல்ல. இந்த சோதனை உலகத்தில் அவன் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தான், செய்கிறான், இன்னும் செய்வான். நிச்சயமாக அவன் மிக்க ஞானம் மிக்கவன் ஆவனான். மெல்ல மெல்ல புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறன்..

ஆத்திகர்களுக்கு அவர்களுடைய மதம் பெற்றோர்கள் மூலம் எது நல்லது எது கெட்டது என்று எல்லாவற்றையும் சொல்லிகொடுத்து வளர்க்கும். தவறு செய்தால் தண்டிக்கும். நாத்திகர்கள் இவர்களை பார்த்து , "சுய அறிவு அற்றவர்கள்" , "மதங்களின் அடிமைகள்" அப்படி இப்படி என்று  கிண்டல் செய்வார்கள். செய்து விட்டு போகட்டும்.  நாத்திகர்கள் அனாதையாக வளரும் குழந்தையை போல அவர்களாகவே வளர வேண்டியிருக்கும். சுதந்திரம் இருக்கும், ஆனால் வழியும் தெரியாது வழி நடத்தப் படவும் மாட்டார்கள்   சிலர் ஒழுக்கம் அது இது என்பர், ஆனால் ஆளாளுக்கு ஒரு அளவுகோல்.   எல்லாவற்றிலும் சுதந்திரம். ஆம் ஓரினசேர்க்கை முதல் அப்பார்ஷன் வரை. மற்றவர்களுக்கு  சுதந்திரமான விஷயத்தில் தனது சுதந்திரம் பற்றி மட்டுமே கவலை படுபவர்.இஷ்டம் போல வாழ்வார்கள். சொல்லுங்கள் எது சிறந்தது? நீங்கள் தேர்வு செய்யும் மதம் மட்டும் சரியாக இருந்துவிட்டால் எது கிடைக்குமோ இல்லையோ மன அமைதி கிடைக்கும். நாத்திகர்களுக்கு அது டாஸ்மாக்கில் கிடைக்கும்.