விலங்குகளுக்கும் சொர்க்கம் நரகம் உண்டா என்ன?

பிறக்கும் போது அன்னை தன்னுடைய மார்புக்கு அருகில் கொண்டு சென்றால் மட்டுமே பால் குடிக்க நிலையில்தான் மனிதன் படைக்கப் பட்டுளான், ஆனால் மற்றவைகளோ.. உதாரணமாக ஆட்டு குட்டி சில மணித்துளிகளில் நடக்க ஆரம்பித்து விடும்.

ஆனால் வளர வளர மனிதன் தன் அறிவை பயன்படுத்தி நிறைய மாற்றங்களை கொண்டு வருகிறான். ஆனால் மற்றவை அப்படியே தன்னுடை உணவை கூட தம்மால் உருவாக்கி கொள்ள இயலாத நிலையில் தான்  இருக்கின்றன. ஏனைய உயிரினங்கள் கிட்டத்தட்ட் புரோகிராம் செய்யப்பட்ட ரோபோ போலத்தான் இருக்கின்றன, என்ன புரோகிராம் உள்ளோதோ அதை மட்டுமே ஆரம்பத்தில் இருந்து சாகும் வரை செய்யும்.

மனிதன் அப்படி அல்ல.. ஒன்றும் அறியாத நிலையில் பிறக்கிறான்.  காலபோக்கில் புதிய விஷயங்களை ஏற்று கொண்டு தன்னை தானே ஸெல்ப் டெவெலப்மெண்ட் செய்யும் அளவுக்கு வளருகிறான், அவனுடய OS (சாரி சகோ.. ஒரு புரிதலுக்காக கூறுகிறான்)) அதை அனுமத்கிறது.

 அறிவு திறன், உடல் வலிமை எல்லாவற்றிலும் வேண்டுமென்றே குறைத்து கொடுக்கப்பட்ட ஐந்து  அறிவு ஜீவிகளுக்கு கேள்வி கணக்கு வைப்பதில் நியாயம் இல்லை என்பதால் இறைவன் விட்டு விடுகிறான். ஆனால் செயற்கரிய காரியங்களை செய்யும் அளவுக்கு உயரும் மனிதனுக்கு இறைவன் உன்னுடைய அறிவு படி என்ன செய்தாய் என்று கேட்பான். மனிதனுக்கு மற்ற உயிரினங்களுக்கும் மலைக்கும் கடுகுக்கும் வித்தியாசம் இருக்கிறது.