அறிவியல் இறைவனை மறுத்துவிடுமா ?

ஒரு உதாரணம் கொண்டு பேசுவோமே....  நீங்கள் கிராவிட்டியை என்கிற ஒரு விஞ்ஞான உண்மையை கண்டு பிடித்ததால் இருக்கின்ற இறைவன் இல்லாமல் ஆகி விடுமா? உங்கள் கேள்வியில் எந்த நியாயமும் இல்லை. இல்லை விஞ்ஞானம் எதையாவது படைக்கிறதா?

இறைவனுடைய படைப்பில் மனிதன்  எதை மனிதன் புரிந்து கொண்டானோ அதைதான் அறிவியல் என்கிறான். அறிவியல் விதிகள் எல்லாம் தானாக உருவாக முடியாதது.

ஆப்பிள் நியுட்டனின் தலையில் விழும் வரை "கிராவிட்டி" பற்றிய அறிவு இல்லை. கிராவிட்டி முன்பும் இருந்தது அதை அவன் தற்போது கண்டு பிடித்தான். அவ்வளவுதான். கிராவிட்டி என்ற ஒன்றை மனிதன் அறிந்து கொண்டதால் அது இறைவனை தேவை இல்லாமல் ஆக்கி விடாது.  கிரவிட்டியை படைத்த இறைவனின் ஆற்றலை விளங்கி அவனுக்கு ஏற்றுக் கொள்வதுதான் உண்மையான பகுத்தறிவு. மாறாக இறைவனை மறுப்பது அல்ல. எல்லா புகழும் இறைவனுக்கே.   மனிதன் இன்னும் எதை புரிந்து கொள்ள வில்லையோ அதை இன்னும் ஆராய்ந்து கொண்டே இருக்கிறான். ஆராயட்டும், இறைவன் இருக்கிறான் என்பதை உணர்த்தும் அத்தாட்சிகள் ஏராளம் இருக்கின்றன. ஆராய்ந்து இறைவனின் வல்லமையை உணரட்டும்.

அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, “எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!”. (3:191.)