திருமணம் மற்றும் விபச்சாரம்: என்ன வேறுபாடு?

உலகில் தோன்றிய முதல் ஜோடியே  (ஆதம்-அவ்வை) ஆனாலும் படைத்த இறைவன் அனுமதியோடு அவர்கள் சேர்ந்தது  திருமணம் ஆகும்.

நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள். (அல் குரான் 4:4)



அநேக சட்டங்கள் படி எந்த ஒரு ஆணும் எந்த ஒரு பெண்ணுடனும் விரும்பினால் உடல் உறவு கொள்ள முடியும். அதே போல எந்த பெண்ணும் எந்த ஒரு ஆணுடன் உடல் உறவு கொள்ளவும்  முடியும், குழந்தை பெறவும் முடியும். இது திருமணம் ஆகாது.

எப்போது அது திருமணம் என்று ஆகும் என்றால் அந்த ஒரு ஆணும் அந்த ஒரு பெண்ணும் சேர்ந்து இனி நாம் கணவன் மனைவியாக தொடருவோம் என்று ஒரு வகையான உறுதி மொழி எடுக்கும் போதுதான், அது திருமணமாக சமுதாயத்தில் பார்க்கப்படும். இல்லறம் என்றால் அதில் தாம்பத்ய உறவு இருக்கிறது.  இஸ்லாம் படி திருமணம் என்பது "ஒரு ஆணுக்கும்" மற்றும் "ஒரு பெண்ணுக்கும்" இடையேயான ஓர் ஒப்பந்தம்.

இதற்கிடையில் இருவரில் ஒருவர் வேறு யாருடனாவது உடல் உறவு கொண்டால் அது திருமணத்தை முறிக்குமா என்றால் முறிக்காது. ஆனால் சமுதாயம் படி இது விபச்சாரம் ஆகும். ஏன் இது விபச்சாரம் என்று கருதப்படுகிறது என்றால் இங்கே "ஒரு வகையான உறுதி மொழியோ, ஒப்பந்தமோ" மிஸ்ஸிங் அவ்வளவுதான். இந்த உறுதி மொழியை/ஒப்பந்தத்தை இன்னொரு பெண்ணிடமும் ஒரு ஆண் மட்டும் வைத்துக் கொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது. எந்த ஒரு சமுதாயமும் சரி அல்லது இஸ்லாமும் சரி ஒரு ஆண் ஒரு பெண்ணை தாண்டி செய்யும் திருமணத்தை விபச்சாரமாக கருதாது.

பலதார மணம் யதார்த்தத்திற்கு முரண் அல்ல!
=============================================
எந்த ஒரு ஆணும் எந்த ஒரு பெண்ணுடனும் விரும்பினால் உடல் உறவு கொள்ள முடியும்.  குழந்தை பெறவும் முடியும்.இது எல்லாம் திருமணத்தை உருவாகாது என்பது அனைவரும் அறிந்ததே!  சற்று கவனியுங்கள்:ஒரு ஆனால் பல பெண்களை திருப்தி படுத்த முடியும் என்று சொன்னால் அதே போல ஒரு பெண்ணால் பல ஆண்களுக்கும் திருப்தி படுத்த இயலும்.

2. எந்த ஒரு ஆணும் எந்த ஒரு பெண்ணுக்கும் ஒரு நேரத்தில் குழந்தை பெற்று தர  முடியும்.  அதே போல ஒரு பெண்ணால் பல ஆண்களுக்கும் வெவேறு காலகட்டத்தில் குழந்தைகளை பெற்றுத்தர  இயலும்.

==> ஆனால் ஒரே நேரத்தில் ஒரு ஆண் மகனால் பல பெண்களுக்கு குழந்தைகள் தர முடிவதை போல ஒரு பெண்ணால்  பல ஆண்களுக்கு ஒரே நேரத்தில் மகவை பெற்றுத்தர முடியுமா? என்றால் முடியாது. இது ஒரு வகையான இயலாமையா இல்லையா?

பிறக்கும் பிள்ளைக்கு இந்த காலத்தில் வேண்டுமென்றாலும் டி.ஏன்.ஏ சோதனை மூலமாக எந்த ஆணுடைய குழந்தை என்பதை அறிய முடியும் அதே போல சுவனத்தில் ஒரு பெண் பல ஆண்களுடன் உடல் உறவு கொண்டு குழந்தை பிறந்தால் இறைவனால் எந்த ஆண் மகன் காரணம் என்று சொல்ல முடியும். என்றாலும் ஒரு நேரத்தில் ஒருவனுடைய கருவை மட்டுமே சுமக்க கூடிய ஆற்றலுடன் தானே பெண் உள்ளாள்? அப்படி இருக்க ஒருத்திக்கு ஒருவன் என்பதும் ஒருவனுக்கு ஒருத்தி என்பதும் சமம் ஆகாது.

மானகேடானத்தை இறைவன் மறுமையில் ஏற்படுத்த மாட்டான்:
============================================================
இஸ்லாம் தவிர்த்த ஏனைய கலாச்சாரங்களில் கூட ஒருவனுக்கு பல மனைவிகள் என்பது ஏற்புடையதே. ஆனால் ஒருத்திக்கு பல ஆண் என்பது மிக மிக   அரிதான - உலகமும் இதைதான் மிக மிக கேவலமானதாக பார்க்கப்படுகின்ற செயல்.


இந்த செயல் அறிவியல் வளராத முற்காலத்திலும் சரி அறிவியல் வளர்ந்த இக் காலத்திலும்  சரி , வானம் பூமி அழிக்கப்பட்டு சுவர்கத்தில் மனித இனம் வாழும் போதும் சரி, இது ஒரு இயலாமையை/முழுமையடையாததை/வெற்றிடத்தை ஏற்படுத்தும் இந்த செயல்  மனித இனத்திற்கு ஏற்புடையது அல்ல என்பதை இறைவன் அறிந்தவன்.

மனிதர்களுக்கு சோதிப்பதற்காக  சில பல பிரச்சனைகளை தருகிறான், சில கடினமான விதிகளையும் கொடுத்து இருக்கிறான் அவ்வளவே!!  இங்கே மானகேடானது என்று தடுத்ததை மறுமையில் நிர்பந்தப் படுத்த மாட்டான். !!! எனவே ஆணுக்கு மட்டும் பல பெண்ணுக்கு மட்டும் ஏன் குறைவு என்று அறிவு ஜீவிகள் போல கேள்வி கேட்கும் நாத்திகர்களே அல்லது நாத்திகர் போர்வையில் ஒளித்திருக்கும் பிற சமய மதத்தவர்களே....

இறைவனுடைய படைப்புகளிலும், செயல்களிலும் குறை காணுவதையே தொழிலாக கொள்ளாமல் கொஞ்சம் அவன் செய்கையில் உள்ள அறிவு நுட்பம் என்ன என்பதை உற்று நோக்குங்கள். மெல்ல மெல்ல குழப்ப திரைகள் அகலும்.